Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

21. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மகேந்திரன் அணிந்திருந்த குளிர் கண்ணாடி வழியாக மதுமதியை கவனிக்க எளிதாக இருந்தது. அன்றைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் இவள்தான் என்று யாரேனும் சொன்னால் நம்பவே முடியாதபடிக்கு அப்படியே அச்சு அசலாக மகதியை போலவே தோற்றமளித்தாள். அவனுக்கு உண்மை தெரியாமல் இருந்திருந்தால் அவள்தான் மகதி என்றே நினைத்திருப்பான். அவர்கள் பேசுவது காதில் வழ, அதில் கவனம் செலுத்தினான்.

"நீ ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறே, மோ..ம்.. முகுந்த் ? என்றாள் மது.

"பின்னே நான் என்ன செய்யட்டும் டார்லிங்? உங்கள் வீட்டில் நிச்சயம் பண்ணிவிட்டார்கள். எந்த நேரத்திலும் கல்யாணம் வைத்து விடுவார்கள். அப்படி வைத்துவிட்டால் நான் நிச்சயம் உயிரை விட்டுவிடுவேன் டியர்". அந்த மோனீஷ் உரிய ஏற்ற இறக்கங்களுடன் சரியாக பேசினான்.

"அ.. அப்படி எல்லாம் சொல்லாதேடா. நீ இல்லாவிட்டால் என்னால் வாழ முடியாது."

"அது எனக்கு தெரியாதா டார்லிங்? உன்னால் பெத்தவங்களை மீறி என்ன செய்யமுடியும் சொல்லு"

"ஒருவேளை அப்படியே ஏதும் நடந்தால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன் முகுந்.. " மது வராத கண்ணீரை வரவழைத்தபடி பேசினாள். ஆனால் குரலில் அந்த வசனத்திற்கு ஏற்ற உணர்ச்சி தான் சிறிதும் இல்லை ".

மகேந்திரன் பொறுமை இழந்தவனாக ஒரு முடிவுடன் எழுந்து அவர்களை நோக்கி சென்றான். அவனைக் கண்டதும் அந்த மோனீஷிற்கு குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது. மதுவும் அவன் இப்படி நேரடியாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் முகமே சொன்னது. ஆனாலும் அவன் பேசுமுன்பாக அவளே முந்திக்கொண்டள்.

"நீ..நீங்களா? ஐம் வெரி சாரி மகேந்திரன்" என்று போலியான அதிர்ச்சி காட்டினாள். இன்னும் என்ன சொல்லப்போகிறாள் என்று மகேந்திரன் மௌனம் காத்தான்.

"அவன் நம்பி விட்டதாக எண்ணி, தொடர்பு விடுபடாமல்,"வந்து நானும் இவனும் இரண்டு வருஷமா காதலிக்கிறோம். வீட்டில் சொல்லலாம் என்று நினுச்சப்போ அப்பாவுக்கு முடியாமல் போயிட்டுது. சரி அப்புறம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள்ளாக நீங்கள் மதுவை பெண் பார்க்க வருவதாக அப்பா சொன்னார். நானும் நீங்கள் பெண் பார்த்து போன அப்புறமாக சொல்ல நினைத்து காத்திருந்தேன். அப்போது பார்த்து மதுவோட பிரண்டுக்கு விபத்து என்று போய்விட்டாள். அம்மா என்னை கட்டாயப்படுத்தி உங்கள் முன்னாடி நிறுத்தி விட்டார்கள். என்ன செய்வது குடும்ப கௌரவம் போயிடுமே என்று சம்மதித்தேன். ஆனால் அம்மா உன்னை தானே நிச்சயம் பண்ணியது நீ தான் கல்யாணம் பண்ணிக்கனும் என்று சொன்னார்கள். தயவுசெய்து மன்னிச்சிடுங்க. உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களிடம் இதை எப்படி சொல்வது என்று தயக்கமாக இருந்தது" என்று மிகவும் உருக்கமாக பேசினாள். அன்றைக்கு கோவிலில் வைத்து குன்றலோடு மகதி சொன்னதுதான், என்றாலும் அதை மதுமதி சொன்னபோது அதுபோல எந்த உணர்வும் தெரியவில்லை. அதிலேயே அவனுடையவள் எத்தனை உயர்வு என்று பெருமை உண்டாயிற்று.

மகேந்திரனின் உதடுகள் ஏளனமாக தெளிய "பிரமாதம். நீ சினிமாவில் நடிக்கப்போயிருந்தால் விருதுகள் நிச்சயம்" என்றான்.

"சார்...மகி சொல்றது நிஜம். ப்ளீஸ் நம்புங்கள். மதுவை பார்க்க வந்த உங்களை எப்படி இவள் திருமணம் செய்து கொள்ள முடியும்??" மோனீஷ் தன் பங்கிற்கு பேசினான்.

"முகம் இறுக,"மிஸ்டர் மோனீஷ், என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டு,

"இல்லை, இல்லை முகுந்தன் என்று இருவரும் ஒரே குரலாக கூற, கையமர்த்திவிட்டு, "லுக் மிஸ்டர், நீங்கள் முகுந்தன் இல்லை மோனீஷ், இவள் மகதி இல்லை மதுமதி என்று என்னால் நிரூபிக்க முடியும். அதுபோல உங்களால் நிரூபிக்க முடியுமா? என்றான் மகேந்திரன்.

ஒருகணம் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டு உடனே சுதாரித்து," "என்ன சார், ம.. மதுமதியா? நான் அவளை பார்த்ததே இல்லை சார்? இதோ மகதி தான் உங்கள் முன்னாடியே நிற்கிறாளே? அப்புறம் என்ன நிரூபிப்பது?" விட்டால் ஜீன்ஸ், டிஎன்ஏ டெஸ்ட் எல்லாம் எடுத்துவர சொல்வீர்கள் போல" என்றான் நக்கலாக,

"ம்ம்.. நன்றாகத்தான் பேசுகிறீர்கள். அவசியம் ஏற்பட்டால் அதைக்கூட செய்ய சொல்வேன் தான். ஆனால் இப்போது உங்கள் மீதுதான் நம்பகத்தன்மை இல்லை. அதனால் இப்போது அதற்கு அவசியமில்லை. ஒரு நிமிஷம் என்றவன்," திரும்பிப் பார்த்து யாருக்கோ சைகை செய்ய, அவர்களை நோக்கி ஒரு இளைஞன் வந்தான். "இவர், பெயர் மைத்திரேயன். என்னுடைய அந்தரங்க காரியதரிசி, என்று அறிமுகம் செய்துவிட்டு, "அதை கொடுங்கள் மைத்ரேயன், என்றதும், அவன் ஒரு தபால் உறையை தந்தான் அதை பெற்றுக்கொண்டு, அவனை போகச் சொன்னதோடு தொடர்ந்து பேசினான்," இது என்ன தெரியுமா?" நேற்று நீங்கள் எங்கிருந்து பேசினீர்களோ அந்த விவரங்கள்". அந்த நிறுவனத்தில் எனக்கு தெரிந்தவர் இருக்கிறார். அவர் மூலமாக வாங்கினேன். அடுத்து நீங்கள் அங்கிருந்து கிளம்பிய நேரத்தில் நான் மகதியுடன் பேரிஸ் கார்னரில் உள்ள ஒரு கடையில் இருந்தேன். இத்தனையும் போதாது என்றால் ஒரு நிமிஷம் என்று கைப்பேசியில் தகவல் அனுப்பினான். உடனே பதில் வந்தது, அடுத்த பத்து நிமிடங்களில் மகதி அங்கே வர, மற்ற இருவரும் அதிர்ந்து நிற்பதை அவனால் உணர முடிந்தது.

"என் மகதி இவள்தான். அவளுக்கு மூக்கு குத்தியிருக்கிறது. அதனால் தான் என்று மதுமதியை காட்டி "அவளை மகதி இல்லை என்று சொன்னேன்" என்றுவிட்டு, மூக்குத்தி இல்லாது போனாலும் கூட இவள்தான் மகதி என்று நிரூபிக்க என்னிடம் வேறு ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. என்றவாறு மகதியின் புறமாக திரும்பி, " நீ போய் காரில் காத்திரு மா. நான் பேசிவிட்டு சீக்கிரமே வந்துவிடுகிறேன்" என்று அவளை போகச் சொன்னதும்,

மகதி கண்களில் சிரிப்புடன் விடைபெற்று வெளியேற, அப்போதும் விடாமல் மோனீஷ் ஏதோ சொல்ல முயற்சிக்க,

"மிஸ்டர் மோனீஷ், நீங்கள் யார் என்ன என்ற உங்கள் ஜாதகமே என்னிடம் உள்ளது. இதற்கு மேலும் இவளுக்காக பரிந்து பேசினால் ஆள்மாறாட்டம் பண்றதுக்கு உதவியதாக உங்கள் மீது வழக்கு போட நேரும், அது வேண்டாம் என்றால் நீங்கள் உடனே இடத்தை காலி பண்ணுங்கள்" என்றான் உறுதியான குரலில்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் மதுமதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக விலகிச் சென்றான் மோனீஷ்.

மகேந்திரன் காட்டிய சாட்சிகளிலேயே திகைத்துப் போயிருந்த மதுமதி, அடுத்து, அம்மாவுடன் கோவிலுக்கு போயிருப்பதாக கருதப்பட்ட, மகதி அங்கே வரவும், சற்று ஆடித்தான் போனாள். கூடவே ஆத்திரமும் தலைக்கேறியது. அவளை பற்றி அறிந்திருந்தும் தைரியமாக வந்திருக்கிறாளே.. காட்டுகிறேன், இந்த மதுமதியை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டுவிட்டார்கள், உலைக்களமாக மனம் கொதிக்க, மோனீஷ் போவதை செய்கையற்று பாரத்திருந்தவளிடம்

"இன்னமும் நீ மறுப்பாயா மதுமதி, என்றவன் உட்கார், "உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்" என்று அவளை அமரச்செய்து எதிரில் தானும் அமர்ந்த மகேந்திரன் தொடர்ந்து,

"இப்போது நீ பதற்றத்தில் இருக்கிறாய். முதலில் இந்த தண்ணீரை குடி"என்று அவள் புறமாக தண்ணீர் டம்ளரை நகர்த்தினான். மறுக்காமல் மடமடவென்று தண்ணீரை குடித்தாள்.

"உனக்கு மகதியிடம் என்ன வெறுப்பு? எதற்காக அன்றைக்கு நீ அப்படி ஒரு திட்டம் போட்டாய் என்பது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் உண்மையில் நான் மகதியைத் தான் பெண் பார்க்க வந்தேன். அந்த வகையில் பார்த்தால் நீ எனக்கு உதவி தான் செய்திருக்கிறாய். அதற்கு நன்றி, என்றவன்" இத்தோடு நீ இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை விட்டுவிடு, அதுதான் எல்லாருக்கும் நல்லது" என்றான் எச்சரிக்கும் குரலில்..

உள்ளூர அவள் திட்டம் கலைந்து போனதைவிட, மகதி முன் அவளுக்கு அவமானமாகிப் போனதைத்தான் அவளால் கொஞ்சமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவனது பேச்சில் மேலும் கொதித்துப் போய்" முடியாது, முடியாது " என்று தன்னை மீறி சற்று உரத்த குரலில் கூற, அக்கம்பக்கத்தினர் லேசாக திரும்பி பார்க்கவும்,

"ஷ் ஷ் மது, கன்ட்ரோல் யுவர்செல்ஃப் என்றான் மகேந்திரன்.

உடனே தன்னை சுதாரித்து கொண்டு, ஆத்திரம் சற்றும் குறையாமல்," முடியாது மகேந்திரன். ஏற்கனவே மகதி என்னை பெற்ற அம்மாவை என்னிடம் இருந்து பிரித்துவிட்டாள். எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாசம், உரிமை எல்லாவற்றையும் கிடைக்காமல் செய்துவிட்டாள். எப்போதுமே அம்மா அப்பாவிற்கு அவள் தான் உசத்தி. இப்போது என்னோட வாழ்விலும் குறுக்கிடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்".

"ஓ! மாலதி மகதிக்கு மாற்றாந்தாயா? ஆக, அதுதான் இவளுக்கு பிரச்சனை. சொல்லப்போனால் இந்த விவரம் தெரிந்தது முதல் மகதியை இவள் என்ன பாடு படுத்தினாளோ என்று எண்ணும் போதே அவனுக்கு வந்த கோபத்தில்,"இதோ பார் மதுமதி, உன்னோட காரண காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. அதே போல இத்தனை நாள் எப்படியோ, ஆனால் இனி என் மகதிக்கு எதுவும் நேர நான் விடமாட்டேன். என்ன செய்வதானாலும் நீ என்னை தாண்டித் தான் அவளை அணுக முடியும் என்பதை நினைவில் வை" எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதை உணராமல் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்ட பிறகே, அவனது தவறை உணர்ந்தான் மகேந்திரன். ஆனால் சொன்னதை மாற்ற இயலாதே, என்று அவசரமாக யோசித்து, சற்று குரலை மாற்றி "இப்போதுகூட ஆள்மாறாட்டம் செய்தாய் என்று என்னால் உன் மீது வழக்கு போடமுடியும். ஆனால் வருங்கால மைத்துனி என்பதால் நான் உன்னை சும்மா விடுகிறேன்" என்றான்.

அவனது முந்தைய பேச்சிலேயே அவளது வயிறு காந்தியது என்றால் மைத்துனி என்றதில் உடம்பும் எரிய, நிதானத்தை இழந்த மதுமதி, "ஒன்றை மறந்துவிட்டு பேசுகிறீர்கள் மகேந்திரன். அவள் உங்களுக்கு இன்னும் மனைவி ஆகிவிடவில்லை. திருமணம் வரையில் அவள் எங்கள் வீட்டில் தான் இருந்தாக வேண்டும். அப்போது என்ன வேண்டுமானாலும் நேரலாம். 24 மணி நேரமும் உங்களால் கண்காணிக்க முடியுமா என்ன? உங்களால் ஆனதை நீங்கள் பாருங்கள்" என்றவள் அதற்கு மேல் அங்கே நில்லாமல் வேகமாக சென்றுவிட,

அவளிடம் பேசி மனதை மாற்ற எண்ணி வந்த மகேந்திரன், தேவையற்று பேசி அவளை சீண்டிவிட்டு விட்டோமே என்று செய்வதறியாமல் திகைத்து நின்றான்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top