Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

20. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மங்களம் எங்கே தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று மாலதி உள்ளுர கலங்கிக்கொண்டிருந்தாள். உண்மையை சொல்லலாம் என்றால் அதை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கமாக இருந்தது.

சில கணங்கள் மௌனத்தில் கழிய, மங்களம் மாலதியின் கையை பற்றி ஆதரவாக l, "அண்ணி, விஷயம் என்னவென்று எனக்கு தெரியாது என்றாலும் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். மகேன் போயிருக்கிறானே, எதுவும் ஆகாது."என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, கொஞ்சம் இருங்கள் அண்ணி இதோ வருகிறேன்.

மாலதியின் மனம் நெகிழ்ந்துவிட்டது. இந்த பெண்மணிக்கு தான் எத்தனை நல்ல மனது? மகதி மிகவும் கொடுத்து வைத்தவள்" என்று எண்ணும் போதே அவளுக்கு சின்ன மகள் நினைவு வந்தது. முன்தினம் போனில் அவளது பேச்சை திரும்பவும் ஓட்டிப் பார்த்தவளுக்கு, அவள் தான் ஏதோ வினையை இழுத்து விட்டிருக்கிறாள் என்று நிச்சயமாக தெரிந்து போயிற்று. ஆனால் மகேந்திரன் பேசியவிதத்தில் அவள் பயப்படும் அளவிற்கு பெரிதாக ஒன்று மிராது என்று தோன்றியது.

"அண்ணி, இந்தாருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள், என்றார் மங்களம்.

"நன்றி அண்ணி. எனக்கும் முழுவதும் தெரியாது அண்ணி. ஏதோ பிரச்சனை என்று புரிகிறது. கூடவே ஒரு யூகம். உறுதியாக தெரியாமல் அதை சொல்லி உங்களை குழப்புவானேன் என்று நினைத்தேன்" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள் மாலதி.

அவளது தோளில் அதரவாக தட்டிக்கொடுத்துவிட்டு, "அதுவும் சரிதான் அண்ணி. மகேன் வரட்டும். நீங்கள் எங்கள் வீட்டை பாருங்கள்" என்று உள்ளே அழைத்துச் சென்றார் மங்களம்.

கிளம்பியதிலிருந்து மகேந்திரன் அமைதியாக வண்டியை செலுத்த, மகதிக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று புரிந்தது. அது மதுவினால் தான் என்று நிச்சயமாக தோன்ற, "மனு என்ன விஷயம் என்று சொல்கிறீர்களா? "என்றாள்.

அவளது அழைப்பை கவனித்துவிட்டு,"ஹே, மதி நீ பெரிய ஆள்தான். அம்மாவும் மகேன் என்று கூப்பிடுகிறார்கள் என்று கூப்பிடுவதை மாற்றி விட்டாயே? என்று பாராட்ட.

"ச்சு, நான் என்ன கேட்கிறேன் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? என்று அலுத்துக்கொள்ள,

"வித்தியாசமா இருக்கு மதி. ஐ லைக் இட்", என்றவன் "பிரச்சனை என்று பெரிதாக ஒன்றுமில்லை மதி. நீ என் அருகில் இருந்தால் எனக்கு சற்று தெம்பாக இருக்கும். அதனால் தான் உன்னை அழைத்து போகிறேன்", என்றான்.

"ம்ம்.. என்ன விஷயம் என்று சொல்லமாட்டீங்க அப்படித்தானே? "

"சொல்றேன்டா, அதுக்கு முன்னாடி, நீ எந்த சூழ்நிலை வந்தாலும் என்னை பிரிந்து போகமாட்டேன்",என்று எனக்கு வாக்கு கொடு"

மகதிக்கு உடனேயே விஷயம் புரிந்து விட, மதுதானா?" என்று அவனைப் பார்த்தாள்.

மகேந்திரன் ஆமோதிப்பபாக தலையசைக்க, மகதியின் பார்வை சாலையை இலக்கற்று வெறித்தது.

அவளது கையை இதமாக அழுத்தியபடி,"மதி, இது அவளது முதல் முயற்சி. நான் இதை ஓரளவு எதிர்பார்த்தேன். அதனால் நான் அவள் பேச்சை நம்பவில்லை. ஆனால் அதை நான் அவளிடம் சொன்னால் அவள் வேறு ஏதேனும் செய்து நிரூபிக்க முயற்சி செய்வாள் என்று நானே அவளிடம் ஆதாரம் கேட்டிருக்கிறேன். இப்போது அதற்காகத்தான் போய்க்கொண்டு இருக்கிறோம் என்று அவள் விஷயத்தை உள்வாங்க அவகாசம் கொடுத்தான்.

"மது என்ன செய்தாள் அல்லது சொன்னாள் என்று சொல்லுங்க மனு"

"உன்னை காதலிப்பதாக ஒருத்தன் நேற்று எனக்கு போன் பண்ணினான். அப்போதே அது மதுவோட வேலை என்று புரிந்துவிட்டது. உடனடியாக நான் அவளது திட்டத்தை முறியடித்திருப்பேன். ஆனால் அது அவளுக்கு உறைக்காது என்று நினைத்தேன். அதனால் இங்கே உன்னோடு வர சொல்லியிருக்கிறேன் அந்த பையனை. புரிகிறதல்லவா? என்றவன் அவள் முகம் இறுக அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினான்.

"இங்கே பார்டா மதி. நீ ஃப்ரீயா இரு. நான் உன்னை துளியும் சந்தேகமே படவில்லை என்பதை நம்புகிறாயா இல்லையா?"

"நம்புகிறேன் மனு. இப்படி அவள் ஏதாவது செய்வாள் என்று தான் நான் நிச்சயம் நடந்த அன்றைக்கே கிளம்பிவிட்டேன். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை மனு... நான் வேண்டுமானால் விலகிக் கொள்கிறேன். நீங்கள் பேசாமல் அவளையே ..என்று மேலும் மகதி பேசுமுன்பாக அவள் இதழ்களில் ஒற்றை விரலை வைத்து, "இப்போது தானே வாக்கு கொடுத்தாய் விலகமாட்டேன், என்று அதற்குள் இப்படி பேசுகிறாயே மதி? என்றவன் கவனமாக கேள் மதி, இன்றைக்கு தான் கடைசி. இனி ஒருதரம் இந்த பேச்சு நீ பேசினால் நான் உயிரோடு இருக்கமாட்டேன்"என்று தீவிரமான குரலில் மகேந்திரன் கூறவும், சட்டென்று கண்கள் கலங்கிவிட, "ஐயோ அப்படி சொல்லாதீர்கள். இல்லை, இல்லை, என்னை மன்னிச்சிடுங்க, இனி நான் இதுபோல் பேசமாட்டேன் மனு" என்றவளுக்கு கட்டுக்கடங்காமல் கண்ணீர் வழிய,

"ஷ் ஷ்... போதும் இதற்கு மேல் நீ அழக்கூடாது கண்மணி. கண்களை துடைத்துவிட்டு, அந்த பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது. முகத்தை கழஇவிக்கொள்," என்றபோது அவனது குரல் கரகரத்தது.

மகதி இயல்புக்கு திரும்பிவிட, அவளை பின் இருக்கையில் படுத்துக்கொள்ளுமாறு சொல்லி, அவனது திட்டத்தை தெரிவிக்க, அவளும் சம்மதித்து போய் படுத்துக் கொண்டாள். மகேந்திரன் காதில் Bluetooth கருவியை பொருத்திக்கொண்டான்.

சற்று நேரத்தில் கடற்கரை சாலையில் அமைந்திருந்த ரிசார்ட்டிற்குள் சென்று வண்டியை பார்க் செய்தவன், "நான் போய் வரும்வரை,பின்புறம் தலையணை இருக்கிறது பார் அதை எடுத்து வைத்து நீ இப்படியே படுத்துக்கொள், உனக்கு கால் பண்ணி என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன். அதன்படி செய். சரியா" என்று விட்டு அவள் சரி என்றதும் அங்கிருந்து நகர்ந்து பிரதான வாசலை அடைந்தான். அப்போது அந்த முகுந்தனிடம் இருந்து அவனுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது.

"நான் மகதியுடன் வந்துவிட்டேன் சார். உள்ளே கடைசி டேபிளில் இருக்கிறோம்"என்றான் முன்தினம் பேசியவன்.

"ஐந்து நிமிடத்தில் நானும் அங்கே இருப்பேன்”என்று காரை பூட்டாமல் சாவியை மகதியிடம் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றான் மகேந்திரன்.

ரிசார்ட்க்கு வருமுன்பாக மதுமதி, வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அம்மா வந்தாயிற்றா என்று விசாரிக்க, இன்னும் இல்லை என்று பணியாள் தெரிவிக்கவும், உடனே அம்மாவை தொடர்பு கொண்டு, "அவர்கள் எங்கே இருக்கிறார்கள்" என்று விசாரிக்க கோவிலில் நேர்த்தி கடன் செலுத்திவிட்டு மாலையில் திரும்புவதாக மாலதி தெரிவிக்க, மதுமதிக்கு முழுவதுமாக கவலை அகன்றுவிட, அவளது திட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறிவிடும் என்ற நம்பினாள்.

சில கணங்களில் தன் வேக நடையுடன் கம்பீரமாக வந்து அவர்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்த மகேந்திரனை பார்த்த மதுமதி அசந்து போனாள். புகைப்படத்தில் பார்த்தபோதே அவனது தோற்றம் அவளை மயக்கியது என்றாலும் நேரில் அவனை காணவும் கிறங்கித்தான் போனாள். கூடவே இவன் என்னுடையவன் என்ற எண்ணமும் தலைதூக்கியது.

இப்போது அவனை நம்ப வைக்க நடித்தாக வேண்டுமே என்று நினைக்கையில் மகதியின் மீது ஆத்திரம் வந்தது. பெண் பார்க்கும் படலத்தில் மகதியை சிக்க வைத்து தொடர்ந்து இன்னும் பிற திட்டங்களை வகுத்து வைத்திருந்தாள்.

ஆனால் அம்மா இந்த முறை அவளது செயலையே சாதகமாக்கி விட்டாள். இப்போது மகேந்திரனை எப்படி நம்பவைப்பது என்று தீவிரமாக யோசித்தாள் மதுமதி. அரை இருட்டாக இருந்தாலும் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கக்கூடிய விதமாத்தான் ஒளி இருந்தது. மகேந்திரன் அந்த முகுந்தன் என்ற மோனீஷிடம், Bluetooth மூலம் உரையாடலை தொடங்கினான்.

"முகுந்தன் கொஞ்சம் எழுந்து தனியாக வந்து பேசுங்கள்.

"ஓ..ஓகே சார் இதோ வந்துவிட்டேன்."

"குட், கவனமாக கேளுங்கள் முகுந்தன். நான் வந்திருப்பதாக மகதிக்கு தெரியக்கூடாது என்றவன், தொடர்ந்து, நான் வெட்டியாக உட்கார்ந்து உண்ணுகிறவன் இல்லை. நான் கேட்டதுபோல் சீக்கிரம் நிருபித்து விட்டால் இன்றைக்கு பிறகு மகதியை நான் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், என்று உங்களுக்கு உறுதி தருகிறேன்"

"இ..இ.தோ சார்.. "என்ற மோனீஷின் குரல் தடுமாறியது.

"ஓகே. போனை ஆனிலேயே வையுங்கள். சரி போய் பேசுங்கள்."

"சரி சார், என்று மதுமதியை நெருங்கினான் மோனீஷ்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top