காலை நேரம்!
கொடைக்கானலில் இருக்கும் அந்த ஹோட்டல் வரவேற்பில சீசன் நேரம் என்பதால் பரபரப்பாக இருந்தது!
தங்க வருபவர்களும் காலி செய்பவர்களும் சுற்றிப் பார்க்க செல்பவர்களுமாக கொஞ்சம் கசகச என்றுதான் இருந்தது வரவேற்பறை!
மதுவந்தி காரை காவலாளியிடம் விட்டுவிட்டு உள்ளே வந்து எதிர் பட்ட பணியாளர்களின் வணக்கத்தை சன்னமான புன்னகையுடன் சிறு தலையசைவால் ஏற்றவாறு அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்!
மதுவந்தி பெயருக்கேற்ற அழகான தோற்றத்தில் 5.5 அடி உயரத்தில் செய்த தந்தத்தில் செய்த சிலை போல தோனாறினாள் !
அவளது இருக்கையில் அமர்ந்தவள் கண்ணாடி தடுப்பிற்கு வெளியே தெரிந்த வரவேற்பறையில் கூட்டம் குறைந்திருக்க ஓர் இளைஞன் வரவேற்பு பெண்ணிடம் பேசுவது தெரிந்தது!
அவன் ! அந்த முகம் !
மதிவதனிக்கு மறக்க கூடிய முகமா அது? ஆனால் ஏன் இப்படி எதையோ பறி கொடுத்தார் போன்ற தோற்றத்தில் களை இழந்து காணப்படுகிறான்?? அவள் யோசிக்கையில் உள்ளிடப்பேசி சிணுங்க யோசனையுடன் எடுத்தாள்!
வரவேற்பில் இருந்த பானு பேசினாள்! "என்னம்மா பானு?" திர்முனையில் பானு "மேம் இந்த மனிதர் அறை காலி இல்லை என்றால் கேட்க மறுக்கிறார்,ஒரு அறையாவது தந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறார்,மேம்" என்ற பானு மேலும் சொன்னாள்.
"அவர் ஏதோ அவங்க அம்மாவோட ட்ரீட்மெண்ட் விஷயமா மும்பையிலிருந்து இங்கே வந்திருக்காராம்! இரண்டு நாட்களுக்காக அறை வேணுமாம், எல்லா இடத்திலும் கேட்டு இங்கே கடைசியா வந்திருக்கிறாராம்! அட்லீஸ்ட் ஒரு நாளுக்காகவாது அறை தாங்கன்னு கேட்கிறார்" என்ன சொல்றது மேம்?" பானு வினவ மதுவந்தியின் மனம் உடனே பதறியது. அவன் அம்மாவிற்கு என்னாயிற்று? கடவுளே! பதறிய மனதை அடக்கிக் கொண்டு வேகமாய் யோசித்தவள் பானுவிடம், "சரி பானு மேல இருக்கிற ஃபேமிலி கெஸ்ட் ரூம்ல ஒரு அறையை /அவருக்கு கொடுத்து விடு" என்றதும் பானுவிற்கு உள்ளுர வியப்பு உண்டாயிற்று! அதை காட்டிக் கொள்ளாமல் "சரி மேம்", என்று இணைப்பை துண்டித்தாள்!
வந்தவனின் முகத்தை உற்று கவனித்தாள் மதுவந்தி! கலங்கிய, சவரம் செய்யப்படாத முகம், நலுங்கிய ஆடை, அப்படி என்ன நேர்ந்திருக்கும் மனோகரிக்கு? மகளின் பிரசவத்திற்கு தானே கிளம்பிச் சென்றார்?? யோசனையும் ஒருவித பதற்றமுமாக மனம் வேலையில் லயிக்க மறுத்தது!
நினைக்கக் கூடாது என்று ஒதுக்கியவை எல்லாம் மனதில் சித்திரமாய் ஓடியது! அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் தன் செயலாளரை அழைத்து சில வேலைகளை பணித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மதுவந்தி.
கொடைக்கானலில் இருக்கும் அந்த ஹோட்டல் வரவேற்பில சீசன் நேரம் என்பதால் பரபரப்பாக இருந்தது!
தங்க வருபவர்களும் காலி செய்பவர்களும் சுற்றிப் பார்க்க செல்பவர்களுமாக கொஞ்சம் கசகச என்றுதான் இருந்தது வரவேற்பறை!
மதுவந்தி காரை காவலாளியிடம் விட்டுவிட்டு உள்ளே வந்து எதிர் பட்ட பணியாளர்களின் வணக்கத்தை சன்னமான புன்னகையுடன் சிறு தலையசைவால் ஏற்றவாறு அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்!
மதுவந்தி பெயருக்கேற்ற அழகான தோற்றத்தில் 5.5 அடி உயரத்தில் செய்த தந்தத்தில் செய்த சிலை போல தோனாறினாள் !
அவளது இருக்கையில் அமர்ந்தவள் கண்ணாடி தடுப்பிற்கு வெளியே தெரிந்த வரவேற்பறையில் கூட்டம் குறைந்திருக்க ஓர் இளைஞன் வரவேற்பு பெண்ணிடம் பேசுவது தெரிந்தது!
அவன் ! அந்த முகம் !
மதிவதனிக்கு மறக்க கூடிய முகமா அது? ஆனால் ஏன் இப்படி எதையோ பறி கொடுத்தார் போன்ற தோற்றத்தில் களை இழந்து காணப்படுகிறான்?? அவள் யோசிக்கையில் உள்ளிடப்பேசி சிணுங்க யோசனையுடன் எடுத்தாள்!
வரவேற்பில் இருந்த பானு பேசினாள்! "என்னம்மா பானு?" திர்முனையில் பானு "மேம் இந்த மனிதர் அறை காலி இல்லை என்றால் கேட்க மறுக்கிறார்,ஒரு அறையாவது தந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறார்,மேம்" என்ற பானு மேலும் சொன்னாள்.
"அவர் ஏதோ அவங்க அம்மாவோட ட்ரீட்மெண்ட் விஷயமா மும்பையிலிருந்து இங்கே வந்திருக்காராம்! இரண்டு நாட்களுக்காக அறை வேணுமாம், எல்லா இடத்திலும் கேட்டு இங்கே கடைசியா வந்திருக்கிறாராம்! அட்லீஸ்ட் ஒரு நாளுக்காகவாது அறை தாங்கன்னு கேட்கிறார்" என்ன சொல்றது மேம்?" பானு வினவ மதுவந்தியின் மனம் உடனே பதறியது. அவன் அம்மாவிற்கு என்னாயிற்று? கடவுளே! பதறிய மனதை அடக்கிக் கொண்டு வேகமாய் யோசித்தவள் பானுவிடம், "சரி பானு மேல இருக்கிற ஃபேமிலி கெஸ்ட் ரூம்ல ஒரு அறையை /அவருக்கு கொடுத்து விடு" என்றதும் பானுவிற்கு உள்ளுர வியப்பு உண்டாயிற்று! அதை காட்டிக் கொள்ளாமல் "சரி மேம்", என்று இணைப்பை துண்டித்தாள்!
வந்தவனின் முகத்தை உற்று கவனித்தாள் மதுவந்தி! கலங்கிய, சவரம் செய்யப்படாத முகம், நலுங்கிய ஆடை, அப்படி என்ன நேர்ந்திருக்கும் மனோகரிக்கு? மகளின் பிரசவத்திற்கு தானே கிளம்பிச் சென்றார்?? யோசனையும் ஒருவித பதற்றமுமாக மனம் வேலையில் லயிக்க மறுத்தது!
நினைக்கக் கூடாது என்று ஒதுக்கியவை எல்லாம் மனதில் சித்திரமாய் ஓடியது! அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் தன் செயலாளரை அழைத்து சில வேலைகளை பணித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மதுவந்தி.