எளிதாக செய்யக்கூடியது இந்த மோர் குழம்பு! எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! நான் ரசித்து, சமைத்து சுவைத்ததும்கூட!
தேவையான பொருட்கள்
========================
ஒரு பெரிய கப் தயிர் (அதிக புளிப்பில்லாமல்)
1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய். நான் இரண்டு சேர்த்தேன்.
தாளிப்பிற்கு காய்ந்த மிளகாய் நாலு
சின்ன வெங்காயம் - 15
பெருங்காயத்தூள் சிறிது
தேவையான உப்பு
தாளிக்க எண்ணெய் (தேங்காய் எண்ணெய் சிறந்தது)
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
மஞ்சள் தூள் சிறிது
இஞ்சி துண்டு அரை இஞ்ச்
செய்முறை
துவரம் பருப்பை கழுவிவிட்டு, அரைமணி நேரம் உற வைக்கணும்,
உற வச்ச துவரம் பருப்புடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கணும்.. தயிரில் தண்ணீர் சேர்த்து கடைந்து மோராக்கி வச்சுக்கணும்.
சற்று கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், வர மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை கருவேப்பிலையும் சேர்த்த பிறகு, வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க வறுக்கணும் என்று இல்லை.. கண்ணாடி போல ஆனதும் அதில் அரைத்த விழுதுடன் மஞ்சள் பொடி + கொஞ்சம் தண்ணீரை சேர்த்து ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.. (மிதமான தீயில்) பருப்பு சேர்த்து இருக்கிறதால் சீக்கிரமாக அடி பிடிக்க வாய்ப்பு இருக்கு. ஆகவே கிளறி விட்டுக்கணும். பச்சை வாசனை போனதும் கரைத்து வைத்திருக்கும் மோரை கலந்து, தேவையான உப்பையும் சேர்த்து முழுக்க சிம்மில் வைத்து, ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும். அதன்பிறகு சிறிது கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
சுவையான மோர் குழம்பு தயார்!
தேவையான பொருட்கள்
========================
ஒரு பெரிய கப் தயிர் (அதிக புளிப்பில்லாமல்)
1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய். நான் இரண்டு சேர்த்தேன்.
தாளிப்பிற்கு காய்ந்த மிளகாய் நாலு
சின்ன வெங்காயம் - 15
பெருங்காயத்தூள் சிறிது
தேவையான உப்பு
தாளிக்க எண்ணெய் (தேங்காய் எண்ணெய் சிறந்தது)
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
மஞ்சள் தூள் சிறிது
இஞ்சி துண்டு அரை இஞ்ச்
செய்முறை
துவரம் பருப்பை கழுவிவிட்டு, அரைமணி நேரம் உற வைக்கணும்,
உற வச்ச துவரம் பருப்புடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கணும்.. தயிரில் தண்ணீர் சேர்த்து கடைந்து மோராக்கி வச்சுக்கணும்.
சற்று கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், வர மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை கருவேப்பிலையும் சேர்த்த பிறகு, வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க வறுக்கணும் என்று இல்லை.. கண்ணாடி போல ஆனதும் அதில் அரைத்த விழுதுடன் மஞ்சள் பொடி + கொஞ்சம் தண்ணீரை சேர்த்து ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.. (மிதமான தீயில்) பருப்பு சேர்த்து இருக்கிறதால் சீக்கிரமாக அடி பிடிக்க வாய்ப்பு இருக்கு. ஆகவே கிளறி விட்டுக்கணும். பச்சை வாசனை போனதும் கரைத்து வைத்திருக்கும் மோரை கலந்து, தேவையான உப்பையும் சேர்த்து முழுக்க சிம்மில் வைத்து, ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும். அதன்பிறகு சிறிது கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
சுவையான மோர் குழம்பு தயார்!