*அத்தியாயம் – 43*
மலர்வதனியின் அறைக் கதவைத் தட்டிய போது சத்தம் வராமல் போகவும்,"ஏய் மலர் இன்னுமாடி தூக்கம்? என்றபடியே கதவை தள்ளி திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள் வடிவுக்கரசி. அறையை முழுவதுமாக பார்த்துவிட்டு, அதன் பிறகு சிட்டவுட்டில் போய் அன்றைக்கு மருமகள் படுத்திருந் சோபாவில் சற்று நேரம் அமர்ந்தாள், இந்த பொண்ணு எங்கே போனாள்? ஒருவேளை தோட்டத்தில் இருக்கிறாளோ? என்று எண்ணியவள், கீழே மாலை டிபன் சாப்பிட மாமியார் வந்திருப்பாளே, என்று அவசரமாக கீழே இறங்கி, சாப்பாட்டு அறைக்கு வந்தாள்.
அவளைப் பார்த்ததும்,காந்திமதி, "வடிவு,எவ்வளவு நேரமாக காத்திருக்கிறேன்? பலகாரத்தை கொடுத்துவிட்டு அப்புறம் உன்னோட கொஞ்சலை வைத்துக் கொள்வது தானே? என்று சிடுசிடுத்தாள்..
அவள் பின்னோடு இறங்கி வந்த சத்யமூர்த்தி,"ஒரு நாளைக்கு தாமதமானால் என்ன ஆகிவிடும் அம்மா? என்றவாறு அன்னையின் எதிரே அமர்ந்தார்.
"ம்க்கும்.. நீ வேற வக்காலத்து வாங்க வந்துட்டியா ராசா? உன்னோட வயசுக்கு எப்போ சாப்பிட்டாலும் செரிக்கும்டா சத்யம், எனக்கு அப்படியா சொல்லு" என்று சலித்து கொண்டாள்.
மாமியார் பேசியதை காதிலோ மனதிலோ வாங்காதவளாக வடிவுக்கரசி, இயந்திரகதியாய்... சிற்றுண்டியை இருவருக்கும் பரிமாறிவிட்டு, தேனீரையும் கோப்பைகளில் வார்த்து கொடுத்துவிட்டு, "மலர் மாடியில் இல்லை. நீங்க சாப்பிடுங்க, நான் இதோ வந்துவிடுகிறேன்"என்று இறுகிய குரலில் கணவரிடம் சொல்லிவிட்டு வடிவுக்கரசி பின்கட்டிற்கு சென்றாள்....
"அவள் மாடியில் இல்லைன்னா, வேற எங்க போயிறப் போறா? கழுதை கெட்டா குட்டிச்சுவர். புத்தகம் படிக்கிற இடத்தில் இருப்பா, இல்லாட்டி, தோட்டத்தில் இருப்பா,அவ என்ன பெரிய ராசா வூட்டு இளவரசியா? இவளே போய் கூப்பிட்டாதான் அவ வருவாளோ? வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லையா? இல்லேன்னாலும் அவளுக்கு பசிச்சா வந்து கொட்டிக்கப் போறாள்.. அதுதான் வீட்டை உன் மவன் சத்திரமாக்கி வச்சுட்டானே,என்று நொடித்தவள்,தொடர்ந்து "இவளே இப்பத்தான் உடம்புக்கு முடியாம படுத்து கிடந்து எழுந்திருச்சிருக்கிறா.. எதுக்கு இப்படி உடம்பை அலட்டிக்கிறாடா?
சத்யமூர்த்திக்கு உள்ளூர ஆச்சர்யம் உண்டாயிற்று... அவரது அன்னைக்கு தன் மனைவி மீது எப்படி திடீரென்று கரிசனம் முளைத்தது என்று.. அதை பற்றி கேளாமல் விடுத்து, "அவளைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே அம்மா? தம்பி மகள் மேலே பெற்றோர் இல்லாத பெண் என்ற பிரியம்... பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை மலரைப் பார்த்துதான் தீர்த்துக்கிறா.. அத்தோடு டாக்டர் அவள் மனம் வருந்தும்படியா எதையும் செய்யாதீங்கனு சொல்லி இருக்கிறார் அம்மா... அதனால் அவள் எதையோ பண்ணிட்டு போகட்டும்.. என்றவாறு சிற்றுண்டியை உண்பதில் முனைந்தார்.
மகன் சொன்னதை கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள் காந்திமதி.
" நீ என்ன சொல்றே சத்யம்? மருமகள் உடம்பு அவ்வளவு மோசமாவா இருக்கு? என்றாள் கவலையோடு .
சத்யமூர்த்திக்கு அம்மாவின் அக்கறையான கேள்வி மேலும் வியப்பில் ஆழ்த்தியது.. மனைவிக்கும், மலருக்கும் இனி அவளால் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டுமானால் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிவிட்டு, "ஆமாம் அம்மா. வடிவுக்கு இதயம் ரொம்ப பலஹீனமா இருக்கிறதால் அதிர்ச்சியான எந்த விஷயத்தையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.. அடுத்து ஒரு அட்டாக் வந்தால் அவளை காப்பாற்றுவது கஷ்டம் என்று டாக்டர் அன்னைக்கே சொல்லிவிட்டார். அவளுக்கு மலரை அந்த ஒத்தை அறையில் வைத்திருப்பது தான் ரொம்ப வருத்தமான விஷயம். முதலில் அதை மாற்றிவிடணும் என்று தான் ரஞ்சி அவளை எங்கள் அறைப் பக்கத்திலேயே தங்க வைச்சிருக்கிறான்" என்றதும்
காந்திமதி வெகுவாக அதிர்ந்து போனாள். வடிவுக்கரசியின் உடல் நிலை இந்தளவிற்கு மோசமாக இருக்கும் என்று அவள் எண்ணவே இல்லை... மலர்வதனி காணாமல் போனதை அறியும் போது மருமகள் கதி என்னாகுமோ என்று எண்ணும்போதே... சற்று முன் வந்துவிட்டு போன வடிவுக்கரசியின் இறுகிய முகம் நினைவுக்கு வந்தது.. இன்னும் தோட்டத்திற்கு போனவளை வேறு காணவில்லையே? யாரையேனும் அனுப்பி பார்த்து வரச் சொல்லலாமா என்று யோசனையோடு சிற்றுண்டியைக் கூட தொடாமல் பின்வாசலைப் பார்த்தவாறு காந்திமதி அமர்ந்து இருந்தாள்.
சத்யமூர்த்தி சிற்றுண்டியை முடித்துவிட்டு டீயை எடுத்து குடிக்கப்போனார்.. அப்போது வெளி வாசலில் நின்றபடியே "ஐயா சீக்கிரம் ஓடியாங்க ஐயா... அங்கே பெரியம்மா... என்ற சித்தையனின் குரலைக் கேட்டு, இருவருமே திடுக்கிட்டனர். மனைவிக்கு ஏதோ ஆபத்து என்று பதறியவர்... டீ கோப்பையை அப்படியே விட்டுவிட்டு, எழுந்து வாசலுக்கு ஓடினார்... அவரோடு வேலையாளும் ஓடிவிட...
"எதுக்கு இந்த பயல் இப்படி ஓடுறான்.. பெரியம்மா என்றானே? வடிவு பின்னாலே தானே போனாள்?என்று யோசித்த காந்திமதி, ஏற்கனவே சித்தையனின் குரல் கேட்டு அடுப்படியில் வேலையாக இருந்த சொக்கி சாப்பாட்டு கூடத்தின் வாயிலுக்கு வந்திருந்தாள்.. அவளிடம், "அடியேய் நின்னு என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறே? சீக்கிரம் ஓடிப்போய் வெளியே என்னாச்சுன்னு பார்த்து வந்து சொல்லு" என்றாள்.
சொக்கி போர்டிகோவிற்கு போனபோது, அங்கே சத்யமூர்த்தி மனைவியை மடியில் போட்டுக்கொண்டு,"வடிவு கண்ணைத் திறந்து பாரும்மா" என்றவாறு காவல்காரன் நீட்டிய சொம்பிலிருந்த தண்ணீரை தெளித்தார், கூடவே.. திடுமென மனைவி மயங்கி விழக் காரணம் புரியாமல் குழம்பினார். தண்ணீர் பட்டதும் வடிவுக்கரசி மெல்ல கண்விழித்து விட்ட போதும் சட்டென்று எழுந்து கொள்ள முடியாது சோர்வுடன் துவண்டாள்.
"நீ அப்படியே இரு வடிவு, என்று மனைவியை தூக்கிப் போய் கூடத்தில் உள்ள சோபாவில் படுக்க வைத்துவிட்டு,"நல்ல வேளை நீ கண்ணைத் திறந்திட்டே வடிவு, அன்றைக்கு போல உனக்கு என்னவோ என்று நான் பயந்தே போனேன்"என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அதற்குள்ளாக காந்திமதியும் அங்கே வர, மாமியாரை கண்டதும் எழப் போனவளை, "இல்லை எழுந்துக்காதே, அப்படியே படுத்துக்கோ வடிவு" என்றவள் "என்னடா மசமசன்னு நிற்கிறே, சீக்கிரம் போய் டாக்டரை கூட்டிக்கிட்டு வா"என்று மகனை விரட்டினாள்.
"அதெல்லாம் எதற்கு அத்தை? எனக்கு ஒன்றுமில்லை "என்றாள் வடிவுக்கரசி.
"என்ன ஒன்றும் இல்லை? உனக்கு ரொம்ப தெரியுமாக்கும்? டேய் மலருக்கு உடனே போன் போட்டு எங்கே இருக்கிறாள் என்று விசாரிச்சு உடனே வீட்டுக்கு வரச் சொல்லு.. அதுக்கு முன்னாடி டாக்டரைக் கூப்பிடு" என்றவாறு மருமகளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டாள் முதியவள்..
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது.. கேள்வியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், அன்னை சொன்னதை செய்பவராக கைப்பேசியை எடுக்க மாடிக்கு விரைந்தார் சத்யமூர்த்தி.
நடந்தது இதுதான்..
மருமகளை தேடி பார்த்துவிட்டு அம்மா பதறிப்போவாள் என்று அறிந்திருந்த காரணத்தால் மாமன் வீட்டைவிட்டு வெளியே வந்ததும், நிரஞ்சன் கைப்பேசியில் வடிவுக்கரசியை அழைத்து,"பதற்றப்படாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டு, பாட்டி ஏதோ சொன்னார்கள் என்று மலர்வதனி வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாள். இப்போதைக்கு நான் அவளை சமாதானம் செய்து பத்திரமாக ஒரிடத்தில் விட்டிருக்கிறேன்... அந்த விவரங்களை நான் நேரில் வந்து சொல்கிறேன். எப்படியும் இரவுக்குள் வதனி வீட்டிற்கு வந்துவிடுவாள்... ஆனால்.. அதற்குள் பாட்டிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அதற்காக நான் சொல்கிறபடி செய்ய வேண்டும் ... என்று தன் திட்டத்தை தெரிவிக்க.. உடனே ஒப்புக் கொண்டாள்.
அதன்படி தோட்டத்தில் இருந்து பக்கவாட்டில் நடந்து சென்று போர்டிகோவை அடைந்தவள், அப்போது தான் எடுபுடி சித்தையன் உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு, மகன் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, அப்படியே மயக்கம் வந்தார் போல சரிந்தாள்.. எதிர்பார்த்தது போல அவன் கத்தி எல்லோரையும் கூட்டிவிட்டான். இளகவே மாட்டாள் என்று எண்ணியிருந்த மாமியார் ஒரேயடியாக மாறிப் போனதுதான் அவள் சற்றும் எதிர்பாராதது...
அதிலும் மலர்வதனியை வரச் சொன்னது தான் உட்சபட்ச இன்ப அதிர்ச்சியாக இருந்தது...
☆☆☆
விஸ்வநாதனின் வீட்டில்...
மலர்வதனி அவளுக்கான அறைக்குள் சென்றதும் அவளது கைப்பைக்குள் இருந்த கைப்பேசியை எடுத்தாள். அதில் அத்தையின் அழைப்பு எதுவும் வந்திருக்கவில்லை என்பதை அறிந்து சற்று ஆசுவாசம் உண்டாயிற்று. ஆனால் உடனேயே,மனம் பதற, ஒருவேளை அவளைக் காணாமல் அத்தைக்கு என்னவும் ஆகிவிட்டதோ என்று அத்தையின் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றால் அதில் ஸ்விட்ச் ஆப் என்று பதில் வர, அடுத்து சத்யமூர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றால் அது பிஸியாக இருக்கவும்..
மலர்வதனி பயந்து போய் அவசரமாக கைப்பையுடன் கூடத்திற்கு வந்தாள்.. அங்கே ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கை பார்த்திருந்த விஸ்வநாதன், அரவம் கேட்டுத் திரும்பினார்.."என்னம்மா வதனி எங்கே கிளம்பிவிட்டாய்? ஏன் மா அழறே என்னாச்சுமா? என்று பதற்றத்துடன் வினவ,"அப்பா நான் உடனே அத்தையை பார்க்கணும், தப்பு பண்ணிட்டேன் அப்பா.. பாட்டி பேச்சை கேட்டு நான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்க கூடாது... ஐயோ.. அப்பா, நான் கிளம்புகிறேன்.. என்று வாசலை நோக்கி செல்ல,
"இரு வதனி, இந்த நேரத்தில் உன்னை அனுப்பிவிட்டு தவிக்க என்னால முடியாது. இரண்டு நிமிஷம் பொறும்மா இதோ நானும் உன்கூட வர்றேன்" என்று உள்ளறைக்கு சென்றார். அங்கே யாருடனோ தாழ்வான குரலில் அவர் பேசுவது காதில் விழுந்தாலும் என்ன பேசுகிறார் என்று தெளிவாக கேட்கவில்லை.. அப்போது இருந்த மனநிலையில் அதை உற்று கேட்கவும் அவளுக்கு தோன்றவில்லை. சில நிமிடங்களில் தந்தை உடையை மாற்றிக் கொண்டு வர, இருவரும், வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினர்.
வெளியே வந்து அந்த குடியிருப்பின் காவலாளியிடம் ஆட்டோ ஒன்றை அழைத்து வரச் சொல்ல, அவர் உடனே ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுக்க, தந்தையும் மகளும் ஏறிப் பயணித்தனர். மலர்வதனி அப்பாவின் தோளில் சாய்ந்து கண்ணீருடன்... தப்பு பண்ணிவிட்டேன் அப்பா... பாட்டி வீட்டை விட்டு போறேன் என்று அன்றைக்கு துணிமணிகளோடு கிளம்பி நிற்கும் போது.. அவர்களை தடுக்க.. எனக்கு வேறு வழி தெரியவில்லை அப்பா.. அத்தைக்கு முதல் தடவை என்னால் தான் உடம்புக்கு முடியாமல் போச்சு, இப்பவும் ஏதாவது ஆகிவிட்டால் நானும்... என்ற மகளை தட்டிக் கொடுத்துவிட்டு, உஷ்.. அப்படி எல்லாம் எதுவும் ஆகிவிடாது கண்ணம்மா"... இத்தனை வருஷங்கள் கழிச்சு என்னை கடவுள் இங்கே அழைச்சிருக்கார் என்றால் நம்மை ஒன்று சேர்க்கத்தான். நீ தைரியமாக இரும்மா... என்ற விஸ்வநாதன்," நீ ஆட்டோக்காரருக்கு வீட்டு விலாசம் சொல்லுமா" என்றார் விஸ்வநாதன்.
மலர்வதனியும் விலாசம் சொல்ல, ஆட்டோ வீட்டை நோக்கி விரைந்தது.
☆☆☆
மருத்துவர் வந்து வடிவுக்கரசியை பரிசோதித்து விட்டு அவளுக்கு பூரண ஓய்வு தேவை என்று ஊசி ஒன்றைப் போட்டு விட்டு போனதும்,
காந்திமதிக்கு மருமகளின் கவலை சற்று அகன்ற போதும் அவளால் நிம்மதியாக அமர முடியவில்லை..
சத்யமூர்த்தியும் கைப்பேசியில் மலர்வதனியை தொடர்பு கொள்ள முயன்றுவிட்டு, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதில் வந்ததாக சொல்லவும் வெகுவாக கலங்கினாள்.
இத்தனை வயதாகியும் புத்தி கெட்டுப் போய்,ஒரு பாவமும் அறியாத,உலகம் தெரியாத சின்னப் பெண்ணான மலர்வதனியை வீட்டை விட்டுப் போகச் சொன்னதை எண்ணி வருந்தினாள். குலம் கோத்திரம் எல்லாம் பாராமல் தப்பு செய்தது அவளை பெற்றவர்கள் தானே? அதில இவளுக்கு ஒரு பங்குமில்லையே? அப்படி இருக்க அவளை இவ்வளவு காலமாக வெறுத்து ஒதுக்கி வைத்தது பெரிய தப்பு என்றால் அதைவிட துரத்த நினைத்தது எவ்வளவு பெரிய பாவம்..? ஆனால் இப்படி நினைத்து மருகுவதால் மலர்வதனி கிடைத்துவிட மாட்டாள் என்று கண்ணீரை துடைத்துவிட்டு, எழுந்து சாப்பாட்டு அறைக்கு அடுத்ததாக இருந்த பூஜை அறைக்குள் சென்றாள்.
மலர்வதனி நல்லபடியாக திரும்பி விட்டால் இத்தனை நாள் கொடுத்த கஷ்டத்திற்கு பரிகாரமா பேத்தியாக ஏற்றுக் கொண்டு அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதாக மனமுருக வேண்டியபடி அமர்ந்து விட்டாள் காந்திமதி.
☆☆☆
நிரஞ்சன் வீட்டை அடைந்த போது, வெளிச்சம் முழுதாக மறைந்து இருள் பரவியிருக்க... வீடும் நிசப்தமாக இருந்தது.. மல்லிகாவை ஓய்வெடுக்க அனுப்பி விட்டு அன்னையிடம் மற்ற விவரங்கள் தெரிவிக்க சென்றான்.
ஆனால் வடிவுக்கரசி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவனது அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு கீழே பாட்டியை காணச் சென்றான்.
அவளது அறையில் இல்லாது போக, எங்கே போயிருப்பாள் என்று யோசித்தவாறே சாப்பாட்டு அறைக்கு அடுத்திருந்த அறையில் விளக்குகள் எரிவதைப் பார்த்தான். எப்போதும் பாட்டி காலையில் தான் பூஜை செய்வாள்.. மாலையில் அன்னை விளக்கேற்றி வைப்பாள்.. இந்த நேரத்தில் யார் அங்கே என்று எட்டிப் பார்த்தவன் பிரமித்தான்.
காரணம் அப்போது தான் காந்திமதி கண்ணீருடன் கையில் கற்பூரம் ஒன்றை வைத்து கொளுத்திக் கொண்டிருந்தாள்.. சட்டென்று உள்ளே நுழைந்து கற்பூரத்தை ஆராதனை தட்டில் போட்டு விட்டு,"என்ன காரியம் செய்றீங்க பாட்டி? என்று கடிந்தபடியே அவளை எழுப்பி நிறுத்த முயன்றான்..
"இல்லை ராஜா என்னை இப்படியே விட்டுவிடு.. மலரை வீட்டைவிட்டு துரத்தின பாவத்திற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது கண்ணா... அதற்கு எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் இந்த தண்டனையை தடுக்காதேடா, சொல்லப்போனால் இதுகூட போதாதுதான்... அந்த சின்ன பெண் எங்கே நின்னு கலங்கிட்டு இருக்கிறாளோ? நினைச்சாலே நெஞ்சு வலிக்குது கண்ணா.. முடிஞ்சா அவளை எப்படியாவது திரும்ப கூட்டிட்டு வா... நீ விரும்புறவளையே உனக்கு கட்டி வைக்கிறேன் ராஜா"என்று கண்ணீர் வழிய அந்த முதியவள் சொல்ல...
"நிரஞ்சன் முகத்தில் குறும்பாய் ஒரு புன்னகை மலர்ந்தது.."அப்படியா பாட்டி? அப்புறமா பேச்சு மாற மாட்டீங்களே, என்றான்..
"சாமி முன்னாடி சொன்னது ராஜா.. மாறவே மாட்டேன்" என்று உறுதியளித்தாள் காந்திமதி.
"அப்படின்னா நீங்க முதலில் எழுந்து வெளியே வாங்க,"என்று கைத்தாங்கலாக எழுப்பி கூட்டி வந்து சாப்பாட்டு அறையில் அமரச் செய்து, தண்ணீரை பருக கொடுத்தான்... அப்படியே சொக்கியிடம் இருவருக்கும் காபி கலந்து வருமாறு பணித்துவிட்டு காந்திமதியை அழைத்துப் போய் கூடத்தில் அமர வைத்து அவனும் உடன் அமர்ந்தான்..
"வயசான அளவுக்கு அறிவு இல்லாது போய்விட்டது.. என்று மீண்டும் கலங்கியவளின் கையைப் பற்றி தட்டிக் கொடுத்துவிட்டு," "கவலைப்படாதீங்க பாட்டி, என்றவன், தொடர்ந்து நான்கூட இப்ப உங்ககிட்டே சண்டை போடத்தான் வந்தேன்.. ஆனால் நீங்களே மனசு மாறி வருத்தப்பட்டுட்டு இருக்கிறீங்க... உங்களுக்கு சில விஷயங்கள் தெரியாது பாட்டி, இரண்டு நாளுக்கு முன்னாடி நான் வெளியூர் போயிருக்கிறதா சொன்னது எல்லாம் பொய் பாட்டி"என்று அவள் விஷயத்தை உள்வாங்க அவகாசம் கொடுத்து நிறுத்தினான்..
"அப்புறம் எங்கே போயிருந்தே ராஜா" என்றாள் திகைப்புடன்
"இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சதாக இருக்கணுமே தவிர, இப்போதைக்கு அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது பாட்டி.. அப்புறம் அம்மா பயந்துட்டே இருப்பாங்க.. என்றவன் அவனுக்கு நேர்ந்த விபத்தையும் மலர்வதனி அவனுக்கு ரத்தம் அளித்து காப்பாற்றியதையும் சொன்னான்...
"அதைக் கேட்டதும் காந்திமதி,சில கணங்கள் பேச்சற்று அமர்ந்து இருந்துவிட்டு... பின் ஒருவாறு சுதாரித்து,"அன்றைக்கு வீட்டைவிட்டு போகச் சொன்னப்போ இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் என் மனசு மாறிவிடும் என்று அவளுக்கு தெரியாதா கண்ணா? ஆனால் அதை பற்றி அவள் மூச்சுவிடவில்லை... அவ்வளவு ஏன் கெஞ்சவோ அழவோ இல்லையே.. ஒருவேளை அதனால் பிரயோஜனம் இல்லைன்னு நினைச்சிட்டாள் போல... மாறாக அவகாசம் தான் கேட்டாள்.. நான்தான் அவளை புரிஞ்சுக்காமல் தப்பு பண்ணிட்டேன், சே.. நான் எல்லாம் வீட்டுக்கு பெரியவளாக இருக்க கொஞ்சமும் தகுதி இல்லாதவள் ராஜா..என்று நொந்துவிட்டு,"மலரை எப்படி ராஜா கண்டுபிடிக்கிறது? பொழுது வேற சாய்ஞ்சுட்டதே,நீ அவளை எப்போடா தேடி கூட்டிட்டு வரப்போறே.. ராத்திரியில் அவள் ஏதும் தப்பான முடிவுக்கு போயிடப் போறாள் கண்ணா, நீ முதலில் போய் அவளை கொண்டாந்து என் முன்னாடி நிறுத்தினால் தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்டா" என்றாள் கவலையுடன்..
"நீங்கள் கவலையே படாதீங்க பாட்டி. வதனி திரும்ப வந்துவிடுவாள், என்றான் புன்னகையுடன்.
"இப்பத்தானேடா அவள் குணம் பத்தி சொன்னேன்? அப்படியிருக்க எப்படி அவளாக வருவாள் என்கிறாய்?.. பேசாமல் போலீசில, நானே என் குற்றத்தை ஒப்புக்கொண்டு.. அவளை கண்டு பிடிச்சு தரச் சொல்கிறேன் ராஜா"
"அடடா, பாட்டி... நீங்கள் தேவையில்லாமல் மனதை வருத்திக்காதீங்க, உங்களுக்கு கொடுத்த வாக்குக்காக அவள் போயிருந்தாலும், அவளுக்கு அம்மா மேலே ரொம்ப பாசம் பாட்டி.. அதனால் அவள் வந்துவிடுவாள்.. என்றவன், "ஆனால் நீங்கள் பேச்சு மாறமாட்டீங்களே? நிரஞ்சன் மீண்டும் குறும்பு சிரிப்புடன்.. வினவ
காந்திமதிக்கு பேரனின் பேச்சிலும் சிரிப்பிலும் சற்று திடம் உண்டாக, நிச்சயமாக மலர்வதனி திரும்பிவிடுவாள் என்று நம்பினாள்....
அப்போது அங்கே சத்யமூர்த்தி வந்து,"ரஞ்சி நீ எப்போ வந்தே? உன்னை அம்மா உடனே பார்க்க வேண்டும் என்றாள், போய் என்னானு கேளு" என்று கேட்டவாறு ஒரு நாளிதழை எடுத்துக்கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
"நான் கொஞ்சம் முன்னால் தான் வந்தேன் அப்பா, என்றவன் "சரி பாட்டி, நான் அம்மாவை போய் பார்க்கிறேன்.. என்றுவிட்டு நிரஞ்சன், மாடிக்கு சென்றான்..
☆☆☆
பெற்றவளின் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்ற நிரஞ்சன், ஜன்னலோரம் வெளியே பார்க்கும் பாவனையில் இறுகிப்போய் அமர்ந்திருந்த வடிவுக்கரசியை பார்த்ததும் உள்ளம் உருக, வேகமாக அருகில் சென்று அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்தவாறு, அவளது கையைப் பற்றி தன் கையினுள் வைத்துக் கொண்டான்..
"மலர் எங்கே இருக்கிறாள் ரஞ்சி? நீ அப்போது சொன்னது நிஜம்தானே? அம்மாவை சமாதானப்படுத்த சொல்லவில்லையே ரஞ்சி? என்றபோது அவளது கை நடுங்குவதை உணர்ந்து இதமாக அழுத்திவிட்டு
"அப்படி எல்லாம் இல்லை அம்மா. நான் சொன்னது உண்மைதான். இப்போது வதனி யாருடன் இருக்கிறாள் என்று தெரிந்தால் அவளைப் பற்றி கவலைப்படுவதையே விட்டுவிடுவீரகள்" என்று புன்னகைத்தான் மகன்.
வடிவுக்கரசிக்கு இன்னமும் மகன் சொல்வதில் முழு நம்பிக்கை உண்டாகவில்லை.. அவளை சமாதானம் செய்ய முயற்சிப்பதாகவே தோன்றியதால், கேள்வியாக நோக்கினாளே தவிர வாய்மொழியாக ஒன்றும் கேட்கவில்லை..
"என் மாமா, அதாவது உங்கள் தம்பி விஸ்வநாதனோடு தான் வதனி இருக்கிறாள்"என்றதும் வடிவுக்கரசி திடுக்கிட்டு மகனை நோக்கினாள்...
"ரஞ்சி.. நீ. .. நீ சொல்றது... அது உன் மாமன் தானா? என்றவள் மேலே வார்த்தை வராமல் தடுமாறினாள்.
"முதலிலேயே உண்மை என்றேனே அம்மா? என்ற மகன்,"மாமா இன்னும் கொஞ்சம் நேரத்தில் வதனியை அழைத்துக் கொண்டு இங்கே வருவதாக சொன்னார் அம்மா. அதற்கு முன்னால் நான் அவரை எங்கே எப்போது சந்தித்தேன்,என்பதை எல்லாம் உங்களிடம் சொல்லத்தான் இப்போது வந்தேன்", என்று மல்லிகா சாரகேஷ் விவகாரத்தில் தொடங்கி இந்தியாவிற்கு வந்தது வரையில் சற்று சுருக்கமாகவே தெரிவித்தான்...
வடிவுக்கரசி மலைத்துப் போய் அப்படியே அமர்ந்து இருந்தாள்.." தம்பி உயிரோடு இருக்கிறானா? ஆனால் இத்தனை காலமாக என்னை வந்து ஏன் பார்க்கவில்லை ரஞ்சி" என்றவளின் குரல் கரகரத்தது..
"அது உங்களுக்கே தெரியுமே அம்மா.. மாமா வந்தால் பாட்டி உங்களை வார்த்தையால் நோகடித்து விடுவார்களே? அத்தோடு வதனி உயிரோடு இருப்பது அப்போது அவருக்கு தெரியாதே"என்று காரணத்தோடு விளக்கவிட்டு, தொடர்ந்து
"இனி நீங்கள் எதற்காகவும் கவலையோ வருத்தமோ படவே கூடாது அம்மா. சின்ன வயதில் நான் உங்களிடம் காட்டத் தவறிய பாசத்தை எல்லாம் இரட்டிப்பாக தரவும் பெறவும் வேண்டும் அம்மா என்ற நிரஞ்சனின் குரல் இப்போது தழுதழுத்தது..
சட்டென்று வயிற்றோடு மகனை வாரி அணைத்துக் கொண்ட வடிவுக்கரசியின் கண்களும் ஆனந்தத்தில் தளும்பியது..
மலர்வதனியின் அறைக் கதவைத் தட்டிய போது சத்தம் வராமல் போகவும்,"ஏய் மலர் இன்னுமாடி தூக்கம்? என்றபடியே கதவை தள்ளி திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள் வடிவுக்கரசி. அறையை முழுவதுமாக பார்த்துவிட்டு, அதன் பிறகு சிட்டவுட்டில் போய் அன்றைக்கு மருமகள் படுத்திருந் சோபாவில் சற்று நேரம் அமர்ந்தாள், இந்த பொண்ணு எங்கே போனாள்? ஒருவேளை தோட்டத்தில் இருக்கிறாளோ? என்று எண்ணியவள், கீழே மாலை டிபன் சாப்பிட மாமியார் வந்திருப்பாளே, என்று அவசரமாக கீழே இறங்கி, சாப்பாட்டு அறைக்கு வந்தாள்.
அவளைப் பார்த்ததும்,காந்திமதி, "வடிவு,எவ்வளவு நேரமாக காத்திருக்கிறேன்? பலகாரத்தை கொடுத்துவிட்டு அப்புறம் உன்னோட கொஞ்சலை வைத்துக் கொள்வது தானே? என்று சிடுசிடுத்தாள்..
அவள் பின்னோடு இறங்கி வந்த சத்யமூர்த்தி,"ஒரு நாளைக்கு தாமதமானால் என்ன ஆகிவிடும் அம்மா? என்றவாறு அன்னையின் எதிரே அமர்ந்தார்.
"ம்க்கும்.. நீ வேற வக்காலத்து வாங்க வந்துட்டியா ராசா? உன்னோட வயசுக்கு எப்போ சாப்பிட்டாலும் செரிக்கும்டா சத்யம், எனக்கு அப்படியா சொல்லு" என்று சலித்து கொண்டாள்.
மாமியார் பேசியதை காதிலோ மனதிலோ வாங்காதவளாக வடிவுக்கரசி, இயந்திரகதியாய்... சிற்றுண்டியை இருவருக்கும் பரிமாறிவிட்டு, தேனீரையும் கோப்பைகளில் வார்த்து கொடுத்துவிட்டு, "மலர் மாடியில் இல்லை. நீங்க சாப்பிடுங்க, நான் இதோ வந்துவிடுகிறேன்"என்று இறுகிய குரலில் கணவரிடம் சொல்லிவிட்டு வடிவுக்கரசி பின்கட்டிற்கு சென்றாள்....
"அவள் மாடியில் இல்லைன்னா, வேற எங்க போயிறப் போறா? கழுதை கெட்டா குட்டிச்சுவர். புத்தகம் படிக்கிற இடத்தில் இருப்பா, இல்லாட்டி, தோட்டத்தில் இருப்பா,அவ என்ன பெரிய ராசா வூட்டு இளவரசியா? இவளே போய் கூப்பிட்டாதான் அவ வருவாளோ? வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லையா? இல்லேன்னாலும் அவளுக்கு பசிச்சா வந்து கொட்டிக்கப் போறாள்.. அதுதான் வீட்டை உன் மவன் சத்திரமாக்கி வச்சுட்டானே,என்று நொடித்தவள்,தொடர்ந்து "இவளே இப்பத்தான் உடம்புக்கு முடியாம படுத்து கிடந்து எழுந்திருச்சிருக்கிறா.. எதுக்கு இப்படி உடம்பை அலட்டிக்கிறாடா?
சத்யமூர்த்திக்கு உள்ளூர ஆச்சர்யம் உண்டாயிற்று... அவரது அன்னைக்கு தன் மனைவி மீது எப்படி திடீரென்று கரிசனம் முளைத்தது என்று.. அதை பற்றி கேளாமல் விடுத்து, "அவளைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே அம்மா? தம்பி மகள் மேலே பெற்றோர் இல்லாத பெண் என்ற பிரியம்... பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை மலரைப் பார்த்துதான் தீர்த்துக்கிறா.. அத்தோடு டாக்டர் அவள் மனம் வருந்தும்படியா எதையும் செய்யாதீங்கனு சொல்லி இருக்கிறார் அம்மா... அதனால் அவள் எதையோ பண்ணிட்டு போகட்டும்.. என்றவாறு சிற்றுண்டியை உண்பதில் முனைந்தார்.
மகன் சொன்னதை கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள் காந்திமதி.
" நீ என்ன சொல்றே சத்யம்? மருமகள் உடம்பு அவ்வளவு மோசமாவா இருக்கு? என்றாள் கவலையோடு .
சத்யமூர்த்திக்கு அம்மாவின் அக்கறையான கேள்வி மேலும் வியப்பில் ஆழ்த்தியது.. மனைவிக்கும், மலருக்கும் இனி அவளால் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டுமானால் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிவிட்டு, "ஆமாம் அம்மா. வடிவுக்கு இதயம் ரொம்ப பலஹீனமா இருக்கிறதால் அதிர்ச்சியான எந்த விஷயத்தையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.. அடுத்து ஒரு அட்டாக் வந்தால் அவளை காப்பாற்றுவது கஷ்டம் என்று டாக்டர் அன்னைக்கே சொல்லிவிட்டார். அவளுக்கு மலரை அந்த ஒத்தை அறையில் வைத்திருப்பது தான் ரொம்ப வருத்தமான விஷயம். முதலில் அதை மாற்றிவிடணும் என்று தான் ரஞ்சி அவளை எங்கள் அறைப் பக்கத்திலேயே தங்க வைச்சிருக்கிறான்" என்றதும்
காந்திமதி வெகுவாக அதிர்ந்து போனாள். வடிவுக்கரசியின் உடல் நிலை இந்தளவிற்கு மோசமாக இருக்கும் என்று அவள் எண்ணவே இல்லை... மலர்வதனி காணாமல் போனதை அறியும் போது மருமகள் கதி என்னாகுமோ என்று எண்ணும்போதே... சற்று முன் வந்துவிட்டு போன வடிவுக்கரசியின் இறுகிய முகம் நினைவுக்கு வந்தது.. இன்னும் தோட்டத்திற்கு போனவளை வேறு காணவில்லையே? யாரையேனும் அனுப்பி பார்த்து வரச் சொல்லலாமா என்று யோசனையோடு சிற்றுண்டியைக் கூட தொடாமல் பின்வாசலைப் பார்த்தவாறு காந்திமதி அமர்ந்து இருந்தாள்.
சத்யமூர்த்தி சிற்றுண்டியை முடித்துவிட்டு டீயை எடுத்து குடிக்கப்போனார்.. அப்போது வெளி வாசலில் நின்றபடியே "ஐயா சீக்கிரம் ஓடியாங்க ஐயா... அங்கே பெரியம்மா... என்ற சித்தையனின் குரலைக் கேட்டு, இருவருமே திடுக்கிட்டனர். மனைவிக்கு ஏதோ ஆபத்து என்று பதறியவர்... டீ கோப்பையை அப்படியே விட்டுவிட்டு, எழுந்து வாசலுக்கு ஓடினார்... அவரோடு வேலையாளும் ஓடிவிட...
"எதுக்கு இந்த பயல் இப்படி ஓடுறான்.. பெரியம்மா என்றானே? வடிவு பின்னாலே தானே போனாள்?என்று யோசித்த காந்திமதி, ஏற்கனவே சித்தையனின் குரல் கேட்டு அடுப்படியில் வேலையாக இருந்த சொக்கி சாப்பாட்டு கூடத்தின் வாயிலுக்கு வந்திருந்தாள்.. அவளிடம், "அடியேய் நின்னு என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறே? சீக்கிரம் ஓடிப்போய் வெளியே என்னாச்சுன்னு பார்த்து வந்து சொல்லு" என்றாள்.
சொக்கி போர்டிகோவிற்கு போனபோது, அங்கே சத்யமூர்த்தி மனைவியை மடியில் போட்டுக்கொண்டு,"வடிவு கண்ணைத் திறந்து பாரும்மா" என்றவாறு காவல்காரன் நீட்டிய சொம்பிலிருந்த தண்ணீரை தெளித்தார், கூடவே.. திடுமென மனைவி மயங்கி விழக் காரணம் புரியாமல் குழம்பினார். தண்ணீர் பட்டதும் வடிவுக்கரசி மெல்ல கண்விழித்து விட்ட போதும் சட்டென்று எழுந்து கொள்ள முடியாது சோர்வுடன் துவண்டாள்.
"நீ அப்படியே இரு வடிவு, என்று மனைவியை தூக்கிப் போய் கூடத்தில் உள்ள சோபாவில் படுக்க வைத்துவிட்டு,"நல்ல வேளை நீ கண்ணைத் திறந்திட்டே வடிவு, அன்றைக்கு போல உனக்கு என்னவோ என்று நான் பயந்தே போனேன்"என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அதற்குள்ளாக காந்திமதியும் அங்கே வர, மாமியாரை கண்டதும் எழப் போனவளை, "இல்லை எழுந்துக்காதே, அப்படியே படுத்துக்கோ வடிவு" என்றவள் "என்னடா மசமசன்னு நிற்கிறே, சீக்கிரம் போய் டாக்டரை கூட்டிக்கிட்டு வா"என்று மகனை விரட்டினாள்.
"அதெல்லாம் எதற்கு அத்தை? எனக்கு ஒன்றுமில்லை "என்றாள் வடிவுக்கரசி.
"என்ன ஒன்றும் இல்லை? உனக்கு ரொம்ப தெரியுமாக்கும்? டேய் மலருக்கு உடனே போன் போட்டு எங்கே இருக்கிறாள் என்று விசாரிச்சு உடனே வீட்டுக்கு வரச் சொல்லு.. அதுக்கு முன்னாடி டாக்டரைக் கூப்பிடு" என்றவாறு மருமகளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டாள் முதியவள்..
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது.. கேள்வியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், அன்னை சொன்னதை செய்பவராக கைப்பேசியை எடுக்க மாடிக்கு விரைந்தார் சத்யமூர்த்தி.
நடந்தது இதுதான்..
மருமகளை தேடி பார்த்துவிட்டு அம்மா பதறிப்போவாள் என்று அறிந்திருந்த காரணத்தால் மாமன் வீட்டைவிட்டு வெளியே வந்ததும், நிரஞ்சன் கைப்பேசியில் வடிவுக்கரசியை அழைத்து,"பதற்றப்படாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டு, பாட்டி ஏதோ சொன்னார்கள் என்று மலர்வதனி வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாள். இப்போதைக்கு நான் அவளை சமாதானம் செய்து பத்திரமாக ஒரிடத்தில் விட்டிருக்கிறேன்... அந்த விவரங்களை நான் நேரில் வந்து சொல்கிறேன். எப்படியும் இரவுக்குள் வதனி வீட்டிற்கு வந்துவிடுவாள்... ஆனால்.. அதற்குள் பாட்டிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அதற்காக நான் சொல்கிறபடி செய்ய வேண்டும் ... என்று தன் திட்டத்தை தெரிவிக்க.. உடனே ஒப்புக் கொண்டாள்.
அதன்படி தோட்டத்தில் இருந்து பக்கவாட்டில் நடந்து சென்று போர்டிகோவை அடைந்தவள், அப்போது தான் எடுபுடி சித்தையன் உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு, மகன் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, அப்படியே மயக்கம் வந்தார் போல சரிந்தாள்.. எதிர்பார்த்தது போல அவன் கத்தி எல்லோரையும் கூட்டிவிட்டான். இளகவே மாட்டாள் என்று எண்ணியிருந்த மாமியார் ஒரேயடியாக மாறிப் போனதுதான் அவள் சற்றும் எதிர்பாராதது...
அதிலும் மலர்வதனியை வரச் சொன்னது தான் உட்சபட்ச இன்ப அதிர்ச்சியாக இருந்தது...
☆☆☆
விஸ்வநாதனின் வீட்டில்...
மலர்வதனி அவளுக்கான அறைக்குள் சென்றதும் அவளது கைப்பைக்குள் இருந்த கைப்பேசியை எடுத்தாள். அதில் அத்தையின் அழைப்பு எதுவும் வந்திருக்கவில்லை என்பதை அறிந்து சற்று ஆசுவாசம் உண்டாயிற்று. ஆனால் உடனேயே,மனம் பதற, ஒருவேளை அவளைக் காணாமல் அத்தைக்கு என்னவும் ஆகிவிட்டதோ என்று அத்தையின் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றால் அதில் ஸ்விட்ச் ஆப் என்று பதில் வர, அடுத்து சத்யமூர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றால் அது பிஸியாக இருக்கவும்..
மலர்வதனி பயந்து போய் அவசரமாக கைப்பையுடன் கூடத்திற்கு வந்தாள்.. அங்கே ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கை பார்த்திருந்த விஸ்வநாதன், அரவம் கேட்டுத் திரும்பினார்.."என்னம்மா வதனி எங்கே கிளம்பிவிட்டாய்? ஏன் மா அழறே என்னாச்சுமா? என்று பதற்றத்துடன் வினவ,"அப்பா நான் உடனே அத்தையை பார்க்கணும், தப்பு பண்ணிட்டேன் அப்பா.. பாட்டி பேச்சை கேட்டு நான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்க கூடாது... ஐயோ.. அப்பா, நான் கிளம்புகிறேன்.. என்று வாசலை நோக்கி செல்ல,
"இரு வதனி, இந்த நேரத்தில் உன்னை அனுப்பிவிட்டு தவிக்க என்னால முடியாது. இரண்டு நிமிஷம் பொறும்மா இதோ நானும் உன்கூட வர்றேன்" என்று உள்ளறைக்கு சென்றார். அங்கே யாருடனோ தாழ்வான குரலில் அவர் பேசுவது காதில் விழுந்தாலும் என்ன பேசுகிறார் என்று தெளிவாக கேட்கவில்லை.. அப்போது இருந்த மனநிலையில் அதை உற்று கேட்கவும் அவளுக்கு தோன்றவில்லை. சில நிமிடங்களில் தந்தை உடையை மாற்றிக் கொண்டு வர, இருவரும், வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினர்.
வெளியே வந்து அந்த குடியிருப்பின் காவலாளியிடம் ஆட்டோ ஒன்றை அழைத்து வரச் சொல்ல, அவர் உடனே ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுக்க, தந்தையும் மகளும் ஏறிப் பயணித்தனர். மலர்வதனி அப்பாவின் தோளில் சாய்ந்து கண்ணீருடன்... தப்பு பண்ணிவிட்டேன் அப்பா... பாட்டி வீட்டை விட்டு போறேன் என்று அன்றைக்கு துணிமணிகளோடு கிளம்பி நிற்கும் போது.. அவர்களை தடுக்க.. எனக்கு வேறு வழி தெரியவில்லை அப்பா.. அத்தைக்கு முதல் தடவை என்னால் தான் உடம்புக்கு முடியாமல் போச்சு, இப்பவும் ஏதாவது ஆகிவிட்டால் நானும்... என்ற மகளை தட்டிக் கொடுத்துவிட்டு, உஷ்.. அப்படி எல்லாம் எதுவும் ஆகிவிடாது கண்ணம்மா"... இத்தனை வருஷங்கள் கழிச்சு என்னை கடவுள் இங்கே அழைச்சிருக்கார் என்றால் நம்மை ஒன்று சேர்க்கத்தான். நீ தைரியமாக இரும்மா... என்ற விஸ்வநாதன்," நீ ஆட்டோக்காரருக்கு வீட்டு விலாசம் சொல்லுமா" என்றார் விஸ்வநாதன்.
மலர்வதனியும் விலாசம் சொல்ல, ஆட்டோ வீட்டை நோக்கி விரைந்தது.
☆☆☆
மருத்துவர் வந்து வடிவுக்கரசியை பரிசோதித்து விட்டு அவளுக்கு பூரண ஓய்வு தேவை என்று ஊசி ஒன்றைப் போட்டு விட்டு போனதும்,
காந்திமதிக்கு மருமகளின் கவலை சற்று அகன்ற போதும் அவளால் நிம்மதியாக அமர முடியவில்லை..
சத்யமூர்த்தியும் கைப்பேசியில் மலர்வதனியை தொடர்பு கொள்ள முயன்றுவிட்டு, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதில் வந்ததாக சொல்லவும் வெகுவாக கலங்கினாள்.
இத்தனை வயதாகியும் புத்தி கெட்டுப் போய்,ஒரு பாவமும் அறியாத,உலகம் தெரியாத சின்னப் பெண்ணான மலர்வதனியை வீட்டை விட்டுப் போகச் சொன்னதை எண்ணி வருந்தினாள். குலம் கோத்திரம் எல்லாம் பாராமல் தப்பு செய்தது அவளை பெற்றவர்கள் தானே? அதில இவளுக்கு ஒரு பங்குமில்லையே? அப்படி இருக்க அவளை இவ்வளவு காலமாக வெறுத்து ஒதுக்கி வைத்தது பெரிய தப்பு என்றால் அதைவிட துரத்த நினைத்தது எவ்வளவு பெரிய பாவம்..? ஆனால் இப்படி நினைத்து மருகுவதால் மலர்வதனி கிடைத்துவிட மாட்டாள் என்று கண்ணீரை துடைத்துவிட்டு, எழுந்து சாப்பாட்டு அறைக்கு அடுத்ததாக இருந்த பூஜை அறைக்குள் சென்றாள்.
மலர்வதனி நல்லபடியாக திரும்பி விட்டால் இத்தனை நாள் கொடுத்த கஷ்டத்திற்கு பரிகாரமா பேத்தியாக ஏற்றுக் கொண்டு அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதாக மனமுருக வேண்டியபடி அமர்ந்து விட்டாள் காந்திமதி.
☆☆☆
நிரஞ்சன் வீட்டை அடைந்த போது, வெளிச்சம் முழுதாக மறைந்து இருள் பரவியிருக்க... வீடும் நிசப்தமாக இருந்தது.. மல்லிகாவை ஓய்வெடுக்க அனுப்பி விட்டு அன்னையிடம் மற்ற விவரங்கள் தெரிவிக்க சென்றான்.
ஆனால் வடிவுக்கரசி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவனது அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு கீழே பாட்டியை காணச் சென்றான்.
அவளது அறையில் இல்லாது போக, எங்கே போயிருப்பாள் என்று யோசித்தவாறே சாப்பாட்டு அறைக்கு அடுத்திருந்த அறையில் விளக்குகள் எரிவதைப் பார்த்தான். எப்போதும் பாட்டி காலையில் தான் பூஜை செய்வாள்.. மாலையில் அன்னை விளக்கேற்றி வைப்பாள்.. இந்த நேரத்தில் யார் அங்கே என்று எட்டிப் பார்த்தவன் பிரமித்தான்.
காரணம் அப்போது தான் காந்திமதி கண்ணீருடன் கையில் கற்பூரம் ஒன்றை வைத்து கொளுத்திக் கொண்டிருந்தாள்.. சட்டென்று உள்ளே நுழைந்து கற்பூரத்தை ஆராதனை தட்டில் போட்டு விட்டு,"என்ன காரியம் செய்றீங்க பாட்டி? என்று கடிந்தபடியே அவளை எழுப்பி நிறுத்த முயன்றான்..
"இல்லை ராஜா என்னை இப்படியே விட்டுவிடு.. மலரை வீட்டைவிட்டு துரத்தின பாவத்திற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது கண்ணா... அதற்கு எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் இந்த தண்டனையை தடுக்காதேடா, சொல்லப்போனால் இதுகூட போதாதுதான்... அந்த சின்ன பெண் எங்கே நின்னு கலங்கிட்டு இருக்கிறாளோ? நினைச்சாலே நெஞ்சு வலிக்குது கண்ணா.. முடிஞ்சா அவளை எப்படியாவது திரும்ப கூட்டிட்டு வா... நீ விரும்புறவளையே உனக்கு கட்டி வைக்கிறேன் ராஜா"என்று கண்ணீர் வழிய அந்த முதியவள் சொல்ல...
"நிரஞ்சன் முகத்தில் குறும்பாய் ஒரு புன்னகை மலர்ந்தது.."அப்படியா பாட்டி? அப்புறமா பேச்சு மாற மாட்டீங்களே, என்றான்..
"சாமி முன்னாடி சொன்னது ராஜா.. மாறவே மாட்டேன்" என்று உறுதியளித்தாள் காந்திமதி.
"அப்படின்னா நீங்க முதலில் எழுந்து வெளியே வாங்க,"என்று கைத்தாங்கலாக எழுப்பி கூட்டி வந்து சாப்பாட்டு அறையில் அமரச் செய்து, தண்ணீரை பருக கொடுத்தான்... அப்படியே சொக்கியிடம் இருவருக்கும் காபி கலந்து வருமாறு பணித்துவிட்டு காந்திமதியை அழைத்துப் போய் கூடத்தில் அமர வைத்து அவனும் உடன் அமர்ந்தான்..
"வயசான அளவுக்கு அறிவு இல்லாது போய்விட்டது.. என்று மீண்டும் கலங்கியவளின் கையைப் பற்றி தட்டிக் கொடுத்துவிட்டு," "கவலைப்படாதீங்க பாட்டி, என்றவன், தொடர்ந்து நான்கூட இப்ப உங்ககிட்டே சண்டை போடத்தான் வந்தேன்.. ஆனால் நீங்களே மனசு மாறி வருத்தப்பட்டுட்டு இருக்கிறீங்க... உங்களுக்கு சில விஷயங்கள் தெரியாது பாட்டி, இரண்டு நாளுக்கு முன்னாடி நான் வெளியூர் போயிருக்கிறதா சொன்னது எல்லாம் பொய் பாட்டி"என்று அவள் விஷயத்தை உள்வாங்க அவகாசம் கொடுத்து நிறுத்தினான்..
"அப்புறம் எங்கே போயிருந்தே ராஜா" என்றாள் திகைப்புடன்
"இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சதாக இருக்கணுமே தவிர, இப்போதைக்கு அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது பாட்டி.. அப்புறம் அம்மா பயந்துட்டே இருப்பாங்க.. என்றவன் அவனுக்கு நேர்ந்த விபத்தையும் மலர்வதனி அவனுக்கு ரத்தம் அளித்து காப்பாற்றியதையும் சொன்னான்...
"அதைக் கேட்டதும் காந்திமதி,சில கணங்கள் பேச்சற்று அமர்ந்து இருந்துவிட்டு... பின் ஒருவாறு சுதாரித்து,"அன்றைக்கு வீட்டைவிட்டு போகச் சொன்னப்போ இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் என் மனசு மாறிவிடும் என்று அவளுக்கு தெரியாதா கண்ணா? ஆனால் அதை பற்றி அவள் மூச்சுவிடவில்லை... அவ்வளவு ஏன் கெஞ்சவோ அழவோ இல்லையே.. ஒருவேளை அதனால் பிரயோஜனம் இல்லைன்னு நினைச்சிட்டாள் போல... மாறாக அவகாசம் தான் கேட்டாள்.. நான்தான் அவளை புரிஞ்சுக்காமல் தப்பு பண்ணிட்டேன், சே.. நான் எல்லாம் வீட்டுக்கு பெரியவளாக இருக்க கொஞ்சமும் தகுதி இல்லாதவள் ராஜா..என்று நொந்துவிட்டு,"மலரை எப்படி ராஜா கண்டுபிடிக்கிறது? பொழுது வேற சாய்ஞ்சுட்டதே,நீ அவளை எப்போடா தேடி கூட்டிட்டு வரப்போறே.. ராத்திரியில் அவள் ஏதும் தப்பான முடிவுக்கு போயிடப் போறாள் கண்ணா, நீ முதலில் போய் அவளை கொண்டாந்து என் முன்னாடி நிறுத்தினால் தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்டா" என்றாள் கவலையுடன்..
"நீங்கள் கவலையே படாதீங்க பாட்டி. வதனி திரும்ப வந்துவிடுவாள், என்றான் புன்னகையுடன்.
"இப்பத்தானேடா அவள் குணம் பத்தி சொன்னேன்? அப்படியிருக்க எப்படி அவளாக வருவாள் என்கிறாய்?.. பேசாமல் போலீசில, நானே என் குற்றத்தை ஒப்புக்கொண்டு.. அவளை கண்டு பிடிச்சு தரச் சொல்கிறேன் ராஜா"
"அடடா, பாட்டி... நீங்கள் தேவையில்லாமல் மனதை வருத்திக்காதீங்க, உங்களுக்கு கொடுத்த வாக்குக்காக அவள் போயிருந்தாலும், அவளுக்கு அம்மா மேலே ரொம்ப பாசம் பாட்டி.. அதனால் அவள் வந்துவிடுவாள்.. என்றவன், "ஆனால் நீங்கள் பேச்சு மாறமாட்டீங்களே? நிரஞ்சன் மீண்டும் குறும்பு சிரிப்புடன்.. வினவ
காந்திமதிக்கு பேரனின் பேச்சிலும் சிரிப்பிலும் சற்று திடம் உண்டாக, நிச்சயமாக மலர்வதனி திரும்பிவிடுவாள் என்று நம்பினாள்....
அப்போது அங்கே சத்யமூர்த்தி வந்து,"ரஞ்சி நீ எப்போ வந்தே? உன்னை அம்மா உடனே பார்க்க வேண்டும் என்றாள், போய் என்னானு கேளு" என்று கேட்டவாறு ஒரு நாளிதழை எடுத்துக்கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
"நான் கொஞ்சம் முன்னால் தான் வந்தேன் அப்பா, என்றவன் "சரி பாட்டி, நான் அம்மாவை போய் பார்க்கிறேன்.. என்றுவிட்டு நிரஞ்சன், மாடிக்கு சென்றான்..
☆☆☆
பெற்றவளின் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்ற நிரஞ்சன், ஜன்னலோரம் வெளியே பார்க்கும் பாவனையில் இறுகிப்போய் அமர்ந்திருந்த வடிவுக்கரசியை பார்த்ததும் உள்ளம் உருக, வேகமாக அருகில் சென்று அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்தவாறு, அவளது கையைப் பற்றி தன் கையினுள் வைத்துக் கொண்டான்..
"மலர் எங்கே இருக்கிறாள் ரஞ்சி? நீ அப்போது சொன்னது நிஜம்தானே? அம்மாவை சமாதானப்படுத்த சொல்லவில்லையே ரஞ்சி? என்றபோது அவளது கை நடுங்குவதை உணர்ந்து இதமாக அழுத்திவிட்டு
"அப்படி எல்லாம் இல்லை அம்மா. நான் சொன்னது உண்மைதான். இப்போது வதனி யாருடன் இருக்கிறாள் என்று தெரிந்தால் அவளைப் பற்றி கவலைப்படுவதையே விட்டுவிடுவீரகள்" என்று புன்னகைத்தான் மகன்.
வடிவுக்கரசிக்கு இன்னமும் மகன் சொல்வதில் முழு நம்பிக்கை உண்டாகவில்லை.. அவளை சமாதானம் செய்ய முயற்சிப்பதாகவே தோன்றியதால், கேள்வியாக நோக்கினாளே தவிர வாய்மொழியாக ஒன்றும் கேட்கவில்லை..
"என் மாமா, அதாவது உங்கள் தம்பி விஸ்வநாதனோடு தான் வதனி இருக்கிறாள்"என்றதும் வடிவுக்கரசி திடுக்கிட்டு மகனை நோக்கினாள்...
"ரஞ்சி.. நீ. .. நீ சொல்றது... அது உன் மாமன் தானா? என்றவள் மேலே வார்த்தை வராமல் தடுமாறினாள்.
"முதலிலேயே உண்மை என்றேனே அம்மா? என்ற மகன்,"மாமா இன்னும் கொஞ்சம் நேரத்தில் வதனியை அழைத்துக் கொண்டு இங்கே வருவதாக சொன்னார் அம்மா. அதற்கு முன்னால் நான் அவரை எங்கே எப்போது சந்தித்தேன்,என்பதை எல்லாம் உங்களிடம் சொல்லத்தான் இப்போது வந்தேன்", என்று மல்லிகா சாரகேஷ் விவகாரத்தில் தொடங்கி இந்தியாவிற்கு வந்தது வரையில் சற்று சுருக்கமாகவே தெரிவித்தான்...
வடிவுக்கரசி மலைத்துப் போய் அப்படியே அமர்ந்து இருந்தாள்.." தம்பி உயிரோடு இருக்கிறானா? ஆனால் இத்தனை காலமாக என்னை வந்து ஏன் பார்க்கவில்லை ரஞ்சி" என்றவளின் குரல் கரகரத்தது..
"அது உங்களுக்கே தெரியுமே அம்மா.. மாமா வந்தால் பாட்டி உங்களை வார்த்தையால் நோகடித்து விடுவார்களே? அத்தோடு வதனி உயிரோடு இருப்பது அப்போது அவருக்கு தெரியாதே"என்று காரணத்தோடு விளக்கவிட்டு, தொடர்ந்து
"இனி நீங்கள் எதற்காகவும் கவலையோ வருத்தமோ படவே கூடாது அம்மா. சின்ன வயதில் நான் உங்களிடம் காட்டத் தவறிய பாசத்தை எல்லாம் இரட்டிப்பாக தரவும் பெறவும் வேண்டும் அம்மா என்ற நிரஞ்சனின் குரல் இப்போது தழுதழுத்தது..
சட்டென்று வயிற்றோடு மகனை வாரி அணைத்துக் கொண்ட வடிவுக்கரசியின் கண்களும் ஆனந்தத்தில் தளும்பியது..