பிறைசூடன் வாக்கு கொடுக்க வேண்டும் என்றதும் மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர். மதுவந்தி அவர் என்ன கேட்டாலும் ஒப்புக் கொள்ளத் தயாராக இருந்தாள்.
"அங்கிள் எதுவென்றாலும் கேளுங்கள் ,ஆன்ட்டிக்காக அவர்களின் இந்த குடும்பம் நல்லாயிருக்கவேண்டும் என்பதற்காக என்னுயிரை கேட்டாலும் தருவேன். நீங்க வெறும் வாக்கு தானே கேட்கிறீர்கள். தருகிறேன் அங்கிள்" என்றதும்
பெரியவர்கள் இருவரும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
"எங்களின் உயிரை நீ உன்னுயிராக ஏற்றுக் கொள்ள வேண்டும் மது” என்று மதுவந்தியை அதிர வைத்தார்.
"அங்கிள் என்ன பேச்சு இது அபத்தமாய்?? விட்டேன் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்! "என்று பதற்றத்துடன் கூற சந்திரமௌலி மர்ம புன்னகையுடன் பேசாது
இருக்க, மனம் படபடக்க, "அப்பா பாருங்க இந்த அங்கிள் பேசுவதை… மதுவந்திக்கு வார்த்தை வராமல் தடுமாறினாள்.!
"எங்கள் உயிர் என்றால் எங்கள் உயிரேவா மது? எங்கள் உயிர் எங்கள் மகன் தானே? அவனை மணந்து கொண்டால் பிறகு உன்னுயிர் அவன்தானே? என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
சினிமாவில் ஸ்டில் சீனில் எல்லாம் ஒருகணம் செயலற்றுப் போகுமே அது போல செயலற்று நின்றாள் மதுவந்தி.
"எங்கேயும் உதவி செய்கிறவர்கள் தான் வாக்கு கேட்பார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் உல்டா ஆகிவிட்டது அவ்வளவுதான். நீ எங்களுக்கு செய்கின்ற உதவிக்காக இந்த வாக்கு கேட்கவில்லையம்மா. முறையாக பெண் கேட்ட உரிமையில் நீ மறுக்க மாட்டாய் என்ற உறுதியில் கேட்கிறேனம்மா" ஆனால் ஒரு விஷயம் மதும்மா, இது கட்டாயம் இல்லையம்மா, காரணம் இது உன் வாழ்க்கை. அதில் முடிவெடுக்க பூரண உரிமை உனக்கு உண்டு. யோசிச்சே பதில் சொல்லலாம் மதும்மா. உனக்கு அதில் நாட்டமில்லை என்றாலும் நீ எப்போதும் உன் ஆன்ட்டிக்கு பிரியமான மதுவாகவே இருக்கலாம் என்றார் பிறைசூடன்.
மதுவந்தி சிலைக்கு உயிர் வந்தது, "உங்கள் பிள்ளையிடம் முதலில் கேட்டுக் கொள்ளுங்கள் அங்கிள்". என்று தன் சம்மதத்தை சொல்லாமல் சொன்னாள்.
சந்திரமௌலியின் முகம் மலர்ந்தது.
பிறைசூடன் ஓ,,,ஹோஹோ,,,என்ற நகைத்துவிட்டு, "அவன் தான் எப்பவோ சொல்லி விட்டானேம்மா. அம்மா காட்டுற பெண்ணைத்தான் கட்டுவேனென்று அதனால் நீ கவலைப்படாதே. புறப்பட வேண்டிய ஏற்பாட்டை செய்துவிட்டு நாளைக்கு தகவல் சொல்கிறேனம்மா! சார் அப்போ நான் போய் வருகிறேன் என்று விடைபெற்றவரிடம்,
"இன்னும்&nb
"அங்கிள் எதுவென்றாலும் கேளுங்கள் ,ஆன்ட்டிக்காக அவர்களின் இந்த குடும்பம் நல்லாயிருக்கவேண்டும் என்பதற்காக என்னுயிரை கேட்டாலும் தருவேன். நீங்க வெறும் வாக்கு தானே கேட்கிறீர்கள். தருகிறேன் அங்கிள்" என்றதும்
பெரியவர்கள் இருவரும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
"எங்களின் உயிரை நீ உன்னுயிராக ஏற்றுக் கொள்ள வேண்டும் மது” என்று மதுவந்தியை அதிர வைத்தார்.
"அங்கிள் என்ன பேச்சு இது அபத்தமாய்?? விட்டேன் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்! "என்று பதற்றத்துடன் கூற சந்திரமௌலி மர்ம புன்னகையுடன் பேசாது
இருக்க, மனம் படபடக்க, "அப்பா பாருங்க இந்த அங்கிள் பேசுவதை… மதுவந்திக்கு வார்த்தை வராமல் தடுமாறினாள்.!
"எங்கள் உயிர் என்றால் எங்கள் உயிரேவா மது? எங்கள் உயிர் எங்கள் மகன் தானே? அவனை மணந்து கொண்டால் பிறகு உன்னுயிர் அவன்தானே? என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
சினிமாவில் ஸ்டில் சீனில் எல்லாம் ஒருகணம் செயலற்றுப் போகுமே அது போல செயலற்று நின்றாள் மதுவந்தி.
"எங்கேயும் உதவி செய்கிறவர்கள் தான் வாக்கு கேட்பார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் உல்டா ஆகிவிட்டது அவ்வளவுதான். நீ எங்களுக்கு செய்கின்ற உதவிக்காக இந்த வாக்கு கேட்கவில்லையம்மா. முறையாக பெண் கேட்ட உரிமையில் நீ மறுக்க மாட்டாய் என்ற உறுதியில் கேட்கிறேனம்மா" ஆனால் ஒரு விஷயம் மதும்மா, இது கட்டாயம் இல்லையம்மா, காரணம் இது உன் வாழ்க்கை. அதில் முடிவெடுக்க பூரண உரிமை உனக்கு உண்டு. யோசிச்சே பதில் சொல்லலாம் மதும்மா. உனக்கு அதில் நாட்டமில்லை என்றாலும் நீ எப்போதும் உன் ஆன்ட்டிக்கு பிரியமான மதுவாகவே இருக்கலாம் என்றார் பிறைசூடன்.
மதுவந்தி சிலைக்கு உயிர் வந்தது, "உங்கள் பிள்ளையிடம் முதலில் கேட்டுக் கொள்ளுங்கள் அங்கிள்". என்று தன் சம்மதத்தை சொல்லாமல் சொன்னாள்.
சந்திரமௌலியின் முகம் மலர்ந்தது.
பிறைசூடன் ஓ,,,ஹோஹோ,,,என்ற நகைத்துவிட்டு, "அவன் தான் எப்பவோ சொல்லி விட்டானேம்மா. அம்மா காட்டுற பெண்ணைத்தான் கட்டுவேனென்று அதனால் நீ கவலைப்படாதே. புறப்பட வேண்டிய ஏற்பாட்டை செய்துவிட்டு நாளைக்கு தகவல் சொல்கிறேனம்மா! சார் அப்போ நான் போய் வருகிறேன் என்று விடைபெற்றவரிடம்,
"இன்னும்&nb