- உன்னக் கண்ட நாள் முதலாய்…
உள்ளம் கொள்ளை போகிறதே…
சந்திக்கும் நேரமெல்லாம்
எதை எதையோ பேசிவிட்டு. …
உன்னோடு பேசியதெல்லாம்
நினைத்து நினைத்து
தனிமை இனிமையானாலும்…
உள்ளே குறையொன்று நெருடிடும்….
மனசுக்குள்ளே கோர்த்து வைத்ததெல்லாம்..
உன்னிடம் கொட்டிவிட ஆசை….
உனை கண்டுவிட்டாலோ..
எங்கே ஒழிகிறதோ வார்த்தைகள். ..
ஆனாலும். …
சொல்லத்தான் நினைக்கிறேன் !